search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியார் சிலை விவகாரம் - எச்.ராஜா கருத்துக்கு கண்டனம் தெரிவித்தது பா.ஜ.க.
    X

    பெரியார் சிலை விவகாரம் - எச்.ராஜா கருத்துக்கு கண்டனம் தெரிவித்தது பா.ஜ.க.

    பெரியார் சிலை உடைப்பு தொடர்பாக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பேஸ்புக் மூலம் வெளியிட்ட கருத்துக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை அகற்றப்பட்டது தொடர்பாக, பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜா பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்தினை பதிவு செய்திருந்தார். அதில், ‘இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதிவெறியர் ஈவேரா ராமசாமி சிலை’ என கூறியிருந்தார். இந்த கருத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர். எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

    இதையடுத்து எச்.ராஜா தனது கருத்தை பேஸ்புக்கில் இருந்து நீக்கிவிட்டார். இன்று வருத்தம் தெரிவித்து பேஸ்புக்கில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்பின்னரும் எச்.ராஜா மீதான விமர்சனமும் எதிர்ப்பும் தொடர்கிறது.



    எச்.ராஜாவின் கருத்துக்கும் பா.ஜ.க.வுக்கும் சம்பந்தம் இல்லை என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருந்தார். இந்நிலையில் எச்.ராஜாவின் கருத்திற்கு பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது.

    ‘பெரியார் போன்ற பெரிய தலைவர்களை அவமதிப்பு செய்வதையும், சிலைகளை இடிப்போம் என்ற மரியாதை குறைவான கருத்துகளையும் பா.ஜ.க. ஆதரிக்காது. அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்’ என பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் கூறியுள்ளார். #tamilnews

    Next Story
    ×