என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொதுத்துறை வங்கிகளின் ரூ.81,683 கோடி கடன் தள்ளுபடி- அருண் ஜெட்லி
Byமாலை மலர்7 March 2018 3:01 AM GMT (Updated: 7 March 2018 3:01 AM GMT)
பொதுத்துறை வங்கிகளின் கடன் தொகை ரூ.81 ஆயிரத்து 683 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறியுள்ளார்.
புதுடெல்லி:
நாடாளுமன்ற மேல்சபையில் ஒரு கேள்விக்கு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று எழுத்துமூலம் பதில் அளித்தார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
2016-17 நிதி ஆண்டில், பாரத ஸ்டேட் வங்கியின் ரூ.20 ஆயிரத்து 339 கோடி உள்பட பொதுத்துறை வங்கிகளின் கடன் தொகை ரூ.81 ஆயிரத்து 683 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. பாரத ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் இதைத் தெரிவிக்கின்றன. வரிச்சலுகைக்காகவும், மூலதன மேம்பாட்டுக்காகவும் மட்டுமே இந்த கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன. இந்த தொகை வங்கிகளின் இருப்புச்சீட்டில் இடம் பெறாது.
அதே நேரத்தில் கடனாளிகள், தாங்கள் வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டிய பொறுப்பு தொடரும்.
இந்த கடன் தள்ளுபடியால் கடனாளிகள் பலன் அடைய முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
மற்றொரு கேள்விக்கு நிதித்துறை ராஜாங்க மந்திரி சிவ பிரதாப் சுக்லா பதில் அளிக்கையில், “2013-ம் ஆண்டு, ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கி 5 நிதி ஆண்டுகளில் ரூ.52 ஆயிரத்து 717 கோடி மதிப்பிலான 13 ஆயிரத்து 643 வங்கி மோசடிகள் நடந்து உள்ளன” என்று குறிப்பிட்டார். #tamilnews
நாடாளுமன்ற மேல்சபையில் ஒரு கேள்விக்கு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று எழுத்துமூலம் பதில் அளித்தார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
2016-17 நிதி ஆண்டில், பாரத ஸ்டேட் வங்கியின் ரூ.20 ஆயிரத்து 339 கோடி உள்பட பொதுத்துறை வங்கிகளின் கடன் தொகை ரூ.81 ஆயிரத்து 683 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. பாரத ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் இதைத் தெரிவிக்கின்றன. வரிச்சலுகைக்காகவும், மூலதன மேம்பாட்டுக்காகவும் மட்டுமே இந்த கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன. இந்த தொகை வங்கிகளின் இருப்புச்சீட்டில் இடம் பெறாது.
அதே நேரத்தில் கடனாளிகள், தாங்கள் வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டிய பொறுப்பு தொடரும்.
இந்த கடன் தள்ளுபடியால் கடனாளிகள் பலன் அடைய முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
மற்றொரு கேள்விக்கு நிதித்துறை ராஜாங்க மந்திரி சிவ பிரதாப் சுக்லா பதில் அளிக்கையில், “2013-ம் ஆண்டு, ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கி 5 நிதி ஆண்டுகளில் ரூ.52 ஆயிரத்து 717 கோடி மதிப்பிலான 13 ஆயிரத்து 643 வங்கி மோசடிகள் நடந்து உள்ளன” என்று குறிப்பிட்டார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X