என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம்
Byமாலை மலர்6 March 2018 7:29 PM GMT (Updated: 6 March 2018 7:29 PM GMT)
கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மும்பை மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
மும்பை:
கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மும்பை மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கருக்கு சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பனாஜி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கல்லீரலில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, மனோகர் பாரிக்கர் பனாஜியில் இருந்து மும்பை ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அவருக்கு அமெரிக்க ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான மருத்துவ பரிசோதனைகள் ஆஸ்பத்திரியில் நடைபெறுகிறது.
மனோகர் பாரிக்கர் சிகிச்சைக்கு அமெரிக்கா செல்ல இருப்பதால் விமான பயணத்துக்கு ஏற்ற வகையில் அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்தும் பரிசோதனை செய்யப்பட்டது. அமெரிக்காவில் 6 அல்லது 8 வாரங்கள் வரை தங்கி இருந்து சிகிச்சை பெறுவார் என்றும் பூரண குணம் அடைந்த பின்னரே கோவா திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து கோவாவில் அரசை வழிநடத்திச் செல்ல 3 மந்திரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மூத்த மந்திரிகளான ராமகிருஷ்ண தவலி கார், விஜய் சர்தேசாய், பிரான்சிஸ் டிசவுசா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அரசின் அவசர தேவைகளுக்கு ரூ.5 கோடி வரை அனுமதி அளிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மும்பை மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக டாக்டர்கள் கூறுகையில், மனோகர் பாரிக்கர் லீலாவதி மருத்துவமனையில் இருந்து கார் மூலம் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து விமானத்தில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார் என தெரிவித்துள்ளனர்.
மேலும், மனோகர் பாரிக்கர் தான் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வது தொடர்பாக ஆளுநர் மிருதுளா சின்ஹாவுக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மும்பை மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கருக்கு சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பனாஜி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கல்லீரலில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, மனோகர் பாரிக்கர் பனாஜியில் இருந்து மும்பை ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அவருக்கு அமெரிக்க ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான மருத்துவ பரிசோதனைகள் ஆஸ்பத்திரியில் நடைபெறுகிறது.
மனோகர் பாரிக்கர் சிகிச்சைக்கு அமெரிக்கா செல்ல இருப்பதால் விமான பயணத்துக்கு ஏற்ற வகையில் அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்தும் பரிசோதனை செய்யப்பட்டது. அமெரிக்காவில் 6 அல்லது 8 வாரங்கள் வரை தங்கி இருந்து சிகிச்சை பெறுவார் என்றும் பூரண குணம் அடைந்த பின்னரே கோவா திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து கோவாவில் அரசை வழிநடத்திச் செல்ல 3 மந்திரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மூத்த மந்திரிகளான ராமகிருஷ்ண தவலி கார், விஜய் சர்தேசாய், பிரான்சிஸ் டிசவுசா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அரசின் அவசர தேவைகளுக்கு ரூ.5 கோடி வரை அனுமதி அளிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மும்பை மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக டாக்டர்கள் கூறுகையில், மனோகர் பாரிக்கர் லீலாவதி மருத்துவமனையில் இருந்து கார் மூலம் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து விமானத்தில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார் என தெரிவித்துள்ளனர்.
மேலும், மனோகர் பாரிக்கர் தான் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வது தொடர்பாக ஆளுநர் மிருதுளா சின்ஹாவுக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X