என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குஜராத்தில் லாரி - பஸ் நேருக்குநேர் மோதிய விபத்தில் 8 பேர் பலி
Byமாலை மலர்26 Feb 2018 3:01 PM GMT (Updated: 26 Feb 2018 3:01 PM GMT)
குஜராத் மாநிலம் சபர்கந்தா பகுதியில் தோட்டத்தொழிலாளர்களை ஏற்றி வந்த ஜீப், லாரியுடன் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள கேத்பிரம்மா என்ற இடத்தில் இருந்து 31 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஜீப் ஒன்று இதார் நகருக்கு இன்று சென்று கொண்டிருந்தது. குந்த்லா என்ற கிராமத்தின் அருகே ஜீப் வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த லாரி மீது எதிர்பாராத விதமாக ஜீப் மோதியது.
மோதிய வேகத்தில் லாரியின் அடியில் ஜீப் நசுங்கியது. இந்த கோர விபத்தில் ஜீப்பில் இருந்த 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதில் 5 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #TamilNews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X