என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒடிசா, மத்திய பிரதேசத்தில் 3 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல்
Byமாலை மலர்24 Feb 2018 12:22 AM GMT (Updated: 24 Feb 2018 12:22 AM GMT)
ஒடிசா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
புதுடெல்லி:
ஒடிசா மாநிலத்தின் பீஜப்பூர் சட்டசபை தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளது. இங்கு 281 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடையும். இத்தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் ஒப்புகை சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மத்திய பிரதேசம் மாநிலத்தில் மங்காலி, கொலாரஸ் ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 28-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இறந்ததை தொடர்ந்து, இந்த மூன்று தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒடிசா மாநிலத்தின் பீஜப்பூர் சட்டசபை தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளது. இங்கு 281 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடையும். இத்தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் ஒப்புகை சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மத்திய பிரதேசம் மாநிலத்தில் மங்காலி, கொலாரஸ் ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 28-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இறந்ததை தொடர்ந்து, இந்த மூன்று தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X