என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பீகாரில் 10-ம் வகுப்பு தேர்வில் ஷூ, சாக்ஸ் அணிய தடை
Byமாலை மலர்20 Feb 2018 6:56 AM GMT (Updated: 20 Feb 2018 6:56 AM GMT)
பீகாரில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ- மாணவிகள் ஷூ, சாக்ஸ் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. காப்பி அடிப்படை தடுக்க மாநில பள்ளி கல்வி வாரியம் நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் சமீப காலங்களில் நடந்த அரசு பொதுத்தேர்வில் பல்வேறு வகையான மோசடிகள் நடந்தது.
இதனால் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜனதா கூட்டணி அரசு மோசடிகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.
இந்த நிலையில் பீகாரில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ- மாணவிகள் ஷூ மற்றும் சாக்ஸ் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. காப்பி அடிப்படை தடுக்க இந்த நடவடிக்கையை மாநில பள்ளி கல்வி வாரியம் மேற்கொண்டு உள்ளது.
தேர்வு எழுத வரும் மாணவ- மாணவிகள் செருப்பு மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று பள்ளி கல்வி வாரியம் அனுப்பியுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளது.
பீகாரில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (21-ந்தேதி) நடக்கிறது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 17 லட்சம் மாணவ- மாணவிகள் எழுதுகிறார்கள். 1426 தேர்வு மையங்கள் உள்ளன.
அங்கு சமீபத்தில் நடந்த இடைநிலை தேர்வில் புதிய விதிமுறைப்படி மோசடியில் ஈடுபட்ட 985 மாணவிகள் நீக்கம் செய்யப்பட்டனர். 25 பேர் கைதாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
பீகார் மாநிலத்தில் சமீப காலங்களில் நடந்த அரசு பொதுத்தேர்வில் பல்வேறு வகையான மோசடிகள் நடந்தது.
இதனால் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜனதா கூட்டணி அரசு மோசடிகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.
இந்த நிலையில் பீகாரில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ- மாணவிகள் ஷூ மற்றும் சாக்ஸ் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. காப்பி அடிப்படை தடுக்க இந்த நடவடிக்கையை மாநில பள்ளி கல்வி வாரியம் மேற்கொண்டு உள்ளது.
தேர்வு எழுத வரும் மாணவ- மாணவிகள் செருப்பு மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று பள்ளி கல்வி வாரியம் அனுப்பியுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளது.
பீகாரில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (21-ந்தேதி) நடக்கிறது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 17 லட்சம் மாணவ- மாணவிகள் எழுதுகிறார்கள். 1426 தேர்வு மையங்கள் உள்ளன.
அங்கு சமீபத்தில் நடந்த இடைநிலை தேர்வில் புதிய விதிமுறைப்படி மோசடியில் ஈடுபட்ட 985 மாணவிகள் நீக்கம் செய்யப்பட்டனர். 25 பேர் கைதாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X