என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரூ.11,700 கோடி மோசடி தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி முன்னாள் மேலாளர் உட்பட 3 பேர் கைது
Byமாலை மலர்19 Feb 2018 11:32 PM GMT (Updated: 19 Feb 2018 11:32 PM GMT)
ரூ.11,700 கோடி மோசடி தொடர்பாக மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி முன்னாள் மேலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #NiravModiScam #PNBScam
மும்பை:
மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,700 கோடி மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நிரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டார். இதுதொடர்பாக நிரவ் மோடி, அவரது மனைவி அமி, சகோதரர் நிஷால் மற்றும் வர்த்தக கூட்டாளியும், கீதாஞ்சலி நகைக்கடை குழும அதிகாரியுமான மெகுல் சோக்ஷி மீதும் வங்கி நிர்வாகம் சி.பி.ஐ.யிடம் புகார் கொடுத்தது.
அவர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து நாடு முழுவதும் கீதாஞ்சலி குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். கொல்கத்தா நகரில் உள்ள ஜாதவ்பூர், கஸ்பா, சால்ட் லேக், நியூ டவுன் மற்றும் எல்ஜின் ரோடு ஆகிய நகைக்கடைகளில் நேற்று நடைபெற்ற சோதனையில் மட்டும் சுமார் 7 கோடி ரூபாய் அளவிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த வங்கி மோசடி வழக்கு தொடர்பாக ஏற்கனவே மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி முன்னாள் மேலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பை வங்கி கிளையின் அந்நியச் செலாவணிப்பிரிவு தலைமை மேலாளர் பெச்சு திவாரி, மேலாளர் யஷ்வந்த், ஏற்றுமதி அதிகாரி பிரபுல் சாவந்தையும் சி.பி.ஐ. கைது செய்துள்ளது. #NiravModiScam #PNBScam #tamilnews
மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,700 கோடி மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நிரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டார். இதுதொடர்பாக நிரவ் மோடி, அவரது மனைவி அமி, சகோதரர் நிஷால் மற்றும் வர்த்தக கூட்டாளியும், கீதாஞ்சலி நகைக்கடை குழும அதிகாரியுமான மெகுல் சோக்ஷி மீதும் வங்கி நிர்வாகம் சி.பி.ஐ.யிடம் புகார் கொடுத்தது.
அவர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து நாடு முழுவதும் கீதாஞ்சலி குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். கொல்கத்தா நகரில் உள்ள ஜாதவ்பூர், கஸ்பா, சால்ட் லேக், நியூ டவுன் மற்றும் எல்ஜின் ரோடு ஆகிய நகைக்கடைகளில் நேற்று நடைபெற்ற சோதனையில் மட்டும் சுமார் 7 கோடி ரூபாய் அளவிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த வங்கி மோசடி வழக்கு தொடர்பாக ஏற்கனவே மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி முன்னாள் மேலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பை வங்கி கிளையின் அந்நியச் செலாவணிப்பிரிவு தலைமை மேலாளர் பெச்சு திவாரி, மேலாளர் யஷ்வந்த், ஏற்றுமதி அதிகாரி பிரபுல் சாவந்தையும் சி.பி.ஐ. கைது செய்துள்ளது. #NiravModiScam #PNBScam #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X