என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 12 நக்சல்கள் கைது
Byமாலை மலர்19 Feb 2018 10:04 PM GMT (Updated: 19 Feb 2018 10:04 PM GMT)
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 12 நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர். #Chhattisgarh #naxalsarrested
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரக்சிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மாநில போலீசார் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் அடங்கிய பாதுகாப்பு படையினர் நக்சலைட்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது டோர்னபால் பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்களை பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால், அவர்களை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் 12 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்த துப்பாக்கிகள், குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் இரண்டு போலீசார் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Chhattisgarh #Sukma #naxalsarrested #tamilnews
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரக்சிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மாநில போலீசார் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் அடங்கிய பாதுகாப்பு படையினர் நக்சலைட்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது டோர்னபால் பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்களை பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால், அவர்களை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் 12 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்த துப்பாக்கிகள், குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் இரண்டு போலீசார் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Chhattisgarh #Sukma #naxalsarrested #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X