search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தக்காளி கூழ் குடிப்பதில் உலக சாதனையை ஏற்படுத்திய இந்தியர் - வீடியோ
    X

    தக்காளி கூழ் குடிப்பதில் உலக சாதனையை ஏற்படுத்திய இந்தியர் - வீடியோ

    மும்பையைச் சேர்ந்த தினேஷ் ஷிவ்நாத் உபாத்யா என்ற இளைஞர் 25 வினாடிகளில் ஒரு முழு பாட்டில் தக்காளி கூழை குடித்து கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார்.
    மும்பை:

    வித்தியாசமாக ஏதாவது செய்து சாதனை செய்ய நினைத்த மும்பையைச் சேர்ந்த தினேஷ் ஷிவ்நாத் உபாத்யா என்ற இளைஞர், மிகவும் புளிப்பு சுவையை கொண்ட தக்காளி கூழை (கெட்ச்சப்) குடித்து சாதிக்க முடிவு செய்தார். சுமார் 400 கிராம் தக்காளி கூழ் கொண்ட முழு பாட்டிலை 25.37 வினாடிகளில் ஒரு சிறிய ஸ்டிரா மூலம் உறிஞ்சி உலக சாதனை படைத்துள்ளார்.

    இவரது இந்த சாதனையை கின்னெஸ் நிறுவனம் அங்கீகரித்துள்ளது. அவரது சாதனை வீடியோவையும் கின்னஸ் நிறுவனம் யூ-டியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளது. தக்காளி கூழ் மட்டுமல்ல மூன்று நிமிடங்களில் அதிக திராட்சைகளை சாப்பிட்டது, மூன்று நிமிடங்களில் அதிக ஆரஞ்சுப்பழங்களை சாப்பிட்டது போன்ற சாதனைகளுக்கு சொந்தக்காரராக தினேஷ் ஷிவ்நாத் உபாத்யா ஏற்கனவே இருந்துள்ளார். #TamilNews


    Next Story
    ×