என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் ரூ.7 கோடி போதை பொருள் கடத்திய தமிழர்கள் உள்பட 10 பேர் கைது
Byமாலை மலர்19 Feb 2018 5:30 AM GMT (Updated: 19 Feb 2018 5:30 AM GMT)
கேரளாவில் ரூ.7 கோடி மதிப்புள்ள போதை பொருளை கடத்தியது தொடர்பாக ராணுவ வீரர், தமிழர்கள் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் அரிக்கோடு பஸ் நிலையம் அருகே நேற்று மாலை போலீசார் ரோந்து வந்தனர். அப்போது 5 பேர் சந்தேகப்படும்படி நின்றனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர்.
இதனையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துவந்து அவர்கள் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அதில் ‘கெற்றமின் என்ற போதை பொருள் 5 கிலோ இருந்தது.
இந்த வகை போதை பொருள் வெந்நீரில் போட்டு அதனை ஊசி மூலம் உடலில் ஏற்றினால் போதை அதிகமாக இருக்கும். இதன் மதிப்பு ரூ.6 கோடியாகும். இதனையடுத்து போதை பொருள் கடத்திய அசோக்குமார் (வயது 23), வாசுதேவன் (53), செட்டிக்குளத்தை சேர்ந்த நடராஜன் (40), சேரன்பாடியை சேர்ந்த கண்ணன் (44), மணிகெனிபொட்டல் பகுதியை சேர்ந்த சிவதாசன் (44) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இதேபோன்று மஞ்சேரி போலீசார் வாகன சோதனை நடத்தியபோது அங்குள்ள கோர்ட்டு அருகே 5 பேர் காரில் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தியபோது அவர்களிடம் 1 கிலோ பிரவுன் சுகர் என்னும் போதை பொருள் இருந்தது. இதன் மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.
அவர்கள் ஜோத்பூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவவீரர் சியாம்சக்கு (30). கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரி கிளர்க் பாசில் (36), அஸ்ரப் (45), மைசூரை சேர்ந்த கார்த்திக் (40), பெங்களூரை சேர்ந்த நவீன் (30) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். #tamilnews
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் அரிக்கோடு பஸ் நிலையம் அருகே நேற்று மாலை போலீசார் ரோந்து வந்தனர். அப்போது 5 பேர் சந்தேகப்படும்படி நின்றனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர்.
இதனையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துவந்து அவர்கள் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அதில் ‘கெற்றமின் என்ற போதை பொருள் 5 கிலோ இருந்தது.
இந்த வகை போதை பொருள் வெந்நீரில் போட்டு அதனை ஊசி மூலம் உடலில் ஏற்றினால் போதை அதிகமாக இருக்கும். இதன் மதிப்பு ரூ.6 கோடியாகும். இதனையடுத்து போதை பொருள் கடத்திய அசோக்குமார் (வயது 23), வாசுதேவன் (53), செட்டிக்குளத்தை சேர்ந்த நடராஜன் (40), சேரன்பாடியை சேர்ந்த கண்ணன் (44), மணிகெனிபொட்டல் பகுதியை சேர்ந்த சிவதாசன் (44) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இதேபோன்று மஞ்சேரி போலீசார் வாகன சோதனை நடத்தியபோது அங்குள்ள கோர்ட்டு அருகே 5 பேர் காரில் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தியபோது அவர்களிடம் 1 கிலோ பிரவுன் சுகர் என்னும் போதை பொருள் இருந்தது. இதன் மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.
அவர்கள் ஜோத்பூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவவீரர் சியாம்சக்கு (30). கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரி கிளர்க் பாசில் (36), அஸ்ரப் (45), மைசூரை சேர்ந்த கார்த்திக் (40), பெங்களூரை சேர்ந்த நவீன் (30) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X