என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆந்திராவில் மீட்கப்பட்ட தமிழர்களின் உடல்கள் அடையாளம் தெரிந்தது
Byமாலை மலர்19 Feb 2018 5:29 AM GMT (Updated: 19 Feb 2018 5:29 AM GMT)
ஆந்திராவின் கடப்பா பகுதியில் உள்ள குளத்தில் இருந்து மீட்கப்பட்ட 5 தமிழர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடப்பா:
ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டுவதற்காக தமிழர்கள் அடிக்கடி சென்று வருகின்றனர். செம்மரங்களை மடக்கி பிடிக்கும் ஆந்திர மாநில போலீசார் தமிழர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆந்திரா மாநிலத்தின் கடப்பா அருகே ஒண்டிமிட்டா வனப்பகுதியில் உள்ள குளத்தில் 5 தமிழர்கள் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. செம்மரம் வெட்ட வந்த அவர்களை போலீசார் துரத்திய போது கடப்பா-திருப்பதி நெடுஞ்சாலையில் உள்ள அந்த குளத்தில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது பற்றி தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
இதற்கிடையே, குளத்தில் இருந்து மீட்கப்பட்ட 5 தமிழர்களின் உடல்கள் இன்று அடையாளம் காணப்பட்டன. இறந்தவர்களில் 3 பேர் சேலம் மாவட்டத்தையும், 2 பேர் விழுப்புரம் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்களின் மரணம் குறித்து உறவினர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையே 5 பேர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி மனித உரிமை அமைப்பினர் இன்று கடப்பா அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #Tamilnews
ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டுவதற்காக தமிழர்கள் அடிக்கடி சென்று வருகின்றனர். செம்மரங்களை மடக்கி பிடிக்கும் ஆந்திர மாநில போலீசார் தமிழர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆந்திரா மாநிலத்தின் கடப்பா அருகே ஒண்டிமிட்டா வனப்பகுதியில் உள்ள குளத்தில் 5 தமிழர்கள் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. செம்மரம் வெட்ட வந்த அவர்களை போலீசார் துரத்திய போது கடப்பா-திருப்பதி நெடுஞ்சாலையில் உள்ள அந்த குளத்தில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது பற்றி தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
இதற்கிடையே, குளத்தில் இருந்து மீட்கப்பட்ட 5 தமிழர்களின் உடல்கள் இன்று அடையாளம் காணப்பட்டன. இறந்தவர்களில் 3 பேர் சேலம் மாவட்டத்தையும், 2 பேர் விழுப்புரம் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்களின் மரணம் குறித்து உறவினர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையே 5 பேர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி மனித உரிமை அமைப்பினர் இன்று கடப்பா அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X