search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திராவில் மீட்கப்பட்ட தமிழர்களின் உடல்கள் அடையாளம் தெரிந்தது
    X

    ஆந்திராவில் மீட்கப்பட்ட தமிழர்களின் உடல்கள் அடையாளம் தெரிந்தது

    ஆந்திராவின் கடப்பா பகுதியில் உள்ள குளத்தில் இருந்து மீட்கப்பட்ட 5 தமிழர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
    கடப்பா:

    ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டுவதற்காக தமிழர்கள் அடிக்கடி சென்று வருகின்றனர். செம்மரங்களை மடக்கி பிடிக்கும் ஆந்திர மாநில போலீசார் தமிழர்களை கைது செய்து வருகின்றனர்.
     
    இந்நிலையில், ஆந்திரா மாநிலத்தின் கடப்பா அருகே ஒண்டிமிட்டா வனப்பகுதியில் உள்ள குளத்தில் 5 தமிழர்கள் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. செம்மரம் வெட்ட வந்த அவர்களை போலீசார் துரத்திய போது கடப்பா-திருப்பதி நெடுஞ்சாலையில் உள்ள அந்த குளத்தில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது பற்றி தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

    இதற்கிடையே, குளத்தில் இருந்து மீட்கப்பட்ட 5 தமிழர்களின் உடல்கள் இன்று அடையாளம் காணப்பட்டன. இறந்தவர்களில் 3 பேர் சேலம் மாவட்டத்தையும், 2 பேர் விழுப்புரம் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்களின் மரணம் குறித்து உறவினர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

    இதற்கிடையே 5 பேர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி மனித உரிமை அமைப்பினர் இன்று கடப்பா அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #Tamilnews
    Next Story
    ×