என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரதமரை ஓ.பன்னீர்செல்வம் ஏன் சுட்டிக்காட்டுகிறார் என்று தெரியவில்லை - பொன்.ராதாகிருஷ்ணன்
Byமாலை மலர்18 Feb 2018 3:20 AM GMT (Updated: 18 Feb 2018 3:20 AM GMT)
அ.தி.மு.க. அணிகள் இணைப்பு விவகாரத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமரை ஏன் சுட்டிக் காட்டுகிறார் என்று தெரியவில்லை என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
புதுடெல்லி:
முன்னாள் மத்திய மந்திரி பொன்னுசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பா.ம.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்தார். இந்த நிலையில் அவர் தற்போது அ.தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.
டெல்லியில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் அமித்ஷா முன்னிலையில் அவர் அக்கட்சியில் இணைந்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பொன்னுசாமிக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
பா.ஜ.க.வில் இணைந்தது குறித்து பொன்னுசாமி கூறியதாவது:-
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் தலைமை இல்லாமல் இருந்தது. இதனால் அங்கு தொடர முடியாத மனவேதனையில் இருந்தேன். அப்போது பொன்.ராதாகிருஷ்ணன் என்னை தொடர்பு கொண்டு பேசியதன் அடிப்படையில் இன்று (நேற்று) பா.ஜ.க.வில் இணைந்துள்ளேன்.
பா.ஜ.க.வில் எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. கட்சி எனக்கு எந்த பொறுப்பை தந்தாலும் அதை ஏற்று பணியாற்றுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், பிரதமர் மோடி கூறியதால்தான் பிரிந்த அணியுடன் இணைந்ததாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியது பற்றி மத்திய மந்திரியிடம் பொன்.ராதா கிருஷ்ணனிடம் நிருபர்கள் கேட்டனர்.
இதற்கு பதில் அளித்து பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது, ‘ஆட்சியில் இருக்கிறவர்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் அவர்களுக்கும் நல்லது. தமிழ்நாட்டுக்கும் நல்லது. பிரதமரை ஓ.பன்னீர்செல்வம் ஏன் சுட்டிக்காட்டுகிறார் என்று தெரியவில்லை’ என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க.வில் இணைய திட்டம் ஏதும் உள்ளதா? என்ற கேள்விக்கு, ‘யார் யார் எங்கு வந்து சேரப்போகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது’ என்று பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளித்தார். #tamilnews
முன்னாள் மத்திய மந்திரி பொன்னுசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பா.ம.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்தார். இந்த நிலையில் அவர் தற்போது அ.தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.
டெல்லியில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் அமித்ஷா முன்னிலையில் அவர் அக்கட்சியில் இணைந்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பொன்னுசாமிக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
பா.ஜ.க.வில் இணைந்தது குறித்து பொன்னுசாமி கூறியதாவது:-
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் தலைமை இல்லாமல் இருந்தது. இதனால் அங்கு தொடர முடியாத மனவேதனையில் இருந்தேன். அப்போது பொன்.ராதாகிருஷ்ணன் என்னை தொடர்பு கொண்டு பேசியதன் அடிப்படையில் இன்று (நேற்று) பா.ஜ.க.வில் இணைந்துள்ளேன்.
பா.ஜ.க.வில் எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. கட்சி எனக்கு எந்த பொறுப்பை தந்தாலும் அதை ஏற்று பணியாற்றுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், பிரதமர் மோடி கூறியதால்தான் பிரிந்த அணியுடன் இணைந்ததாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியது பற்றி மத்திய மந்திரியிடம் பொன்.ராதா கிருஷ்ணனிடம் நிருபர்கள் கேட்டனர்.
இதற்கு பதில் அளித்து பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது, ‘ஆட்சியில் இருக்கிறவர்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் அவர்களுக்கும் நல்லது. தமிழ்நாட்டுக்கும் நல்லது. பிரதமரை ஓ.பன்னீர்செல்வம் ஏன் சுட்டிக்காட்டுகிறார் என்று தெரியவில்லை’ என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க.வில் இணைய திட்டம் ஏதும் உள்ளதா? என்ற கேள்விக்கு, ‘யார் யார் எங்கு வந்து சேரப்போகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது’ என்று பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளித்தார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X