என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேர்தலுக்கு தயாராகுங்கள்: காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு சோனியா கட்டளை
Byமாலை மலர்8 Feb 2018 6:09 AM GMT (Updated: 8 Feb 2018 6:09 AM GMT)
பாராளுமன்றத் தேர்தலுக்கு இப்போதே தயாராகவேண்டும் என காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் இன்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
நாம் புதிய தலைவரை பெற்றிருக்கிறோம். தலைவர் பதவியில் அவர் சிறப்பாக செயல்பட வேண்டும் என உங்கள் சார்பிலும் நானும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த அரசாங்கம் பதவிக்கு வந்து கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த ஆட்சியில் நீதித்துறை, ஊடக மற்றும் சிவில் சமூகம் என அனைத்தும் திட்டமிட்ட தாக்குதலுக்கு உட்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக புலனாய்வு அமைப்புகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன.
குஜராத் மற்றும் சமீபத்தில் நடந்து முடிந்த ராஜஸ்தான் தேர்தல் முடிவுகள் நமக்கு உத்வேகத்தை அளித்துள்ளன. இது மாற்றத்திற்கான நேரம் வருவதை காட்டுகிறது. இதேபோல், காங்கிரஸ் கட்சியின் எழுச்சிக்கு எடுத்துக்காட்டாக கர்நாடக தேர்தலையும் எதிர்பார்க்கிறேன்.
நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே வரலாம். எனவே, எம்.பி.க்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். பாராளுமன்றத் தேர்தலில் பாஜ.க.வை தோற்கடிக்க கட்சியின் தலைவர் ராகுலுடன் இணைந்து செயல்படுவேன்
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
பாராளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் இன்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
நாம் புதிய தலைவரை பெற்றிருக்கிறோம். தலைவர் பதவியில் அவர் சிறப்பாக செயல்பட வேண்டும் என உங்கள் சார்பிலும் நானும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த அரசாங்கம் பதவிக்கு வந்து கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த ஆட்சியில் நீதித்துறை, ஊடக மற்றும் சிவில் சமூகம் என அனைத்தும் திட்டமிட்ட தாக்குதலுக்கு உட்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக புலனாய்வு அமைப்புகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன.
குஜராத் மற்றும் சமீபத்தில் நடந்து முடிந்த ராஜஸ்தான் தேர்தல் முடிவுகள் நமக்கு உத்வேகத்தை அளித்துள்ளன. இது மாற்றத்திற்கான நேரம் வருவதை காட்டுகிறது. இதேபோல், காங்கிரஸ் கட்சியின் எழுச்சிக்கு எடுத்துக்காட்டாக கர்நாடக தேர்தலையும் எதிர்பார்க்கிறேன்.
நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே வரலாம். எனவே, எம்.பி.க்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். பாராளுமன்றத் தேர்தலில் பாஜ.க.வை தோற்கடிக்க கட்சியின் தலைவர் ராகுலுடன் இணைந்து செயல்படுவேன்
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X