search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் முப்படை வீரர்கள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு
    X

    டெல்லியில் முப்படை வீரர்கள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

    குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்ட முப்படை வீரர்கள் தங்களது பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளனர். #RepublicDay #BeatingTheRetreat #BeatingRetreat
    புதுடெல்லி:

    டெல்லியில் ஆண்டுதோறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ளும் முப்படை வீரர்கள், 29-ம் தேதி தங்களது பாசறைக்கு திரும்புவார்கள். இந்த நிகழ்வு வாத்தியக் குழுவினரின் இன்னிசையுடன் நடக்கும். இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார்.

    இந்நிலையில், இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற வீரர்கள் இன்று தங்களது பாசறைக்கு திரும்புகின்றனர். இதற்கான விழா டெல்லி விஜய் சவுக் பகுதியில் தொடங்கியது. முப்படை வீரர்கள் இசைக்குழுவுடன் அணிவகுக்க ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கண்டுகளித்து வருகின்றனர்.



    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் முப்படை தளபதிகள், மத்திய அரசின் உயரதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். 
    Next Story
    ×