search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்ஜினீயரிங் கல்விக்கு புதிய பாடத்திட்டம் - மத்திய மந்திரி அறிமுகப்படுத்தினார்
    X

    என்ஜினீயரிங் கல்விக்கு புதிய பாடத்திட்டம் - மத்திய மந்திரி அறிமுகப்படுத்தினார்

    என்ஜினீயரிங் கல்விக்கு புதிய பாடத்திட்டத்தை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அறிமுகப்படுத்தினார். இதன்படி, படிக்கும் காலத்தில், நிறுவனங்களில் 3 மாதம் பயிற்சி பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    என்ஜினீயரிங் கல்விக்கு புதிய பாடத்திட்டத்தை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அறிமுகப்படுத்தினார். இதன்படி, படிக்கும் காலத்தில், நிறுவனங்களில் 3 மாதம் பயிற்சி பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

    என்ஜினீயரிங் துறையில் தற்போதைய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், என்ஜினீயரிங் மற்றும் தொழிற்கல்வி பாடத்திட்டத்தை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) மாற்றி அமைத்துள்ளது.

    இந்த புதிய பாடத்திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று டெல்லியில் அறிமுகப்படுத்தி வைத்தார்.

    புதிய பாடத்திட்டம், எழுத்துபூர்வ கல்வியை விட செய்முறை கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக அமைந்துள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன்படி, எழுத்து தேர்வில் பெற வேண்டிய கிரெடிட்கள் (மதிப்பீட்டு புள்ளிகள்) எண்ணிக்கை 220-ல் இருந்து 160 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கோடைக்கால பயிற்சியில், 160 கிரெடிட்களில் 14 எடுப்பது கட்டாயம் ஆகும்.

    தொழிற்கல்வி முடித்து வெளியேறும் மாணவர்களில் 60 சதவீதம் பேர், தொழில்துறைக்கு தேவையான தயார்நிலையில் இல்லை என்று புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. அவர்கள் தங்கள் திறமையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    இதை கருத்தில் கொண்டு, என்ஜினீயரிங் மாணவர்கள் அனைவரும் தங்களது படிப்பு காலத்தில் ஒரு நிறுவனத்தில் 2 முதல் 3 மாதங்கள் பயிற்சி பெறுவது புதிய பாடத்திட்டத்தில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையாக இருந்தாலும் அவர்கள் பயிற்சி பெற வேண்டும். இதன்மூலம், அவர்கள் வேலைவாய்ப்புக்கு தேவையான திறமைகளை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், தொழிற்கல்வியில் சேர்ந்தவுடன், தொழிற்கல்விக்கு தேவையான மொழி புலமையையும், அடிப்படை நுணுக்கங்களையும் பெற ஒவ்வொரு மாணவரும் கட்டாய புத்தாக்க பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் புதிய பாடத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

    பல்கலைக்கழகங்கள், ஆலோசனை குழுக்களை அமைத்து, பாடத்திட்டத்தில் ஆண்டுதோறும் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி பேசிய மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், பாடத்திட்டத்தை ஆண்டுதோறும் மாற்றியமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 
    Next Story
    ×