search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருத்தப்படாத முத்தலாக் ஒழிப்பு மசோதாவுக்கு காங்கிரஸ் கண்டனம் - மாநிலங்களைவை நாளைவரை ஒத்திவைப்பு
    X

    திருத்தப்படாத முத்தலாக் ஒழிப்பு மசோதாவுக்கு காங்கிரஸ் கண்டனம் - மாநிலங்களைவை நாளைவரை ஒத்திவைப்பு

    திருத்தப்படாத முத்தலாக் ஒழிப்பு மசோதாவுக்கு கண்டனம் தெரிவித்து நடைபெற்ற விவாதத்தால் பாராளுமன்ற மாநிலங்களைவை நாளைவரை ஒத்திவைக்கப்பட்டது.
    புதுடெல்லி:

    முஸ்லிம்களிடையே நடைமுறையில் உள்ள உடனடி ‘முத்தலாக்’ முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, பாராளுமன்ற மக்களவையில் ‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு மசோதா கொண்டுவரப்பட்டது. அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

    மசோதா மீது காங்கிரஸ் கட்சி சில திருத்தங்களை கொண்டு வந்தது. ஆனால், அவற்றின் மீது ஓட்டெடுப்பு நடத்த வற்புறுத்தவில்லை.

    மசோதாவை அப்படியே நிறைவேற்ற முயற்சிக்காமல், மாநிலங்களவை தேர்வு குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை மட்டுமின்றி, பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் வற்புறுத்தி வருகிறது.

    ஆனால், மக்களவையில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டு விட்டதால், எந்த குழுவுக்கும் அனுப்பத் தேவையில்லை என்று மத்திய அரசு கூறி வருகிறது.

    இந்நிலையில், இன்று பிற்பகல் 3.15 மணியளவில் பாராளுமன்ற மாநிலங்களவையில் சட்டத்துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத் முத்தலாக் ஒழிப்பு மசோதா தாக்கல் செய்தார்.  இந்த மசோதாவில் தாங்கள் வலியுறுத்திய திருத்தங்கள் இடம்பெறாததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.



    இந்த அமளிக்கு இடையே பேசிய சட்டத்துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத், ‘பாராளுமன்ற மக்களவையால் முத்தலாக் ஒழிப்பு மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகும் உத்தரப்பிரதேசம் மாநிலம், மொராதாபாத்தில் ஒரு பெண்ணுக்கு அவரது கணவர் முத்தலாக் கொடுத்துள்ளார்’ என குறிப்பிட்டார்.

    இதுதொடர்பாக, தொடர்ந்து மாநிலங்களவை தேர்வு குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்க காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா வலியுறுத்தினார். இதற்காக காங்கிரஸ் நியமித்துள்ள 17 எம்.பி.க்கள் பட்டியலையும் அவர் அளித்தார்.



    இவ்விவகாரம் தொடர்பாக உடனடியாக விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என குறிப்பிட்ட அவர், இதுதொடர்பாக கான் நோட்டீஸ் அளித்தார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, பாராளுமன்ற நடைமுறைகளின்படி ஒரு விவாகரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருவதற்கு 24 மணி நேரம் முன்னதாகவே நோட்டீஸ் அளிக்கப்பட வேண்டும் என்பதை சுட்டிக் காட்டினார்.

    மக்களவையில் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் இன்று மாநிலங்களைவையில் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு கண்டனம் தெரிவித்த அருண் ஜெட்லி, இந்த மசோதாவை நிறைவேற விடாமல் தடுக்க காங்கிரஸ் முயற்சிப்பதாகவும், காங்கிரஸ் கட்சியின் இரட்டை நிலைப்பாட்டை ஒட்டுமொத்த நாடும் கூர்ந்து கவனிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

    இதனால், இருதரப்பினருக்கும் இடையே காரசாரமான விவாதம் மூண்டதால் மாநிலங்களவையை நாளை காலை 11 மணிவரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஹமித் அன்சாரி அறிவித்தார். #tamilnews
    Next Story
    ×