search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி மேல்-சபையில் முத்தலாக் மசோதா இன்று தாக்கல் - காங்கிரசுக்கு மத்திய அரசு ‘திடீர்’ வேண்டுகோள்
    X

    டெல்லி மேல்-சபையில் முத்தலாக் மசோதா இன்று தாக்கல் - காங்கிரசுக்கு மத்திய அரசு ‘திடீர்’ வேண்டுகோள்

    டெல்லி மேல்-சபையில் முத்தலாக் மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில், மசோதாவில் திருத்தத்தை வற்புறுத்த வேண்டாம் என்று காங்கிரசுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது. #Muthalaq #MuthalaqBan
     புதுடெல்லி:

    டெல்லி மேல்-சபையில் முத்தலாக் மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில், மசோதாவில் திருத்தத்தை வற்புறுத்த வேண்டாம் என்று காங்கிரசுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது.

    முஸ்லிம்களிடையே நடைமுறையில் உள்ள உடனடி ‘முத்தலாக்’ முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, பாராளுமன்ற மக்களவையில் ‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு மசோதா கொண்டுவரப்பட்டது. அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

    மசோதா மீது காங்கிரஸ் கட்சி சில திருத்தங்களை கொண்டு வந்தது. ஆனால், அவற்றின் மீது ஓட்டெடுப்பு நடத்த வற்புறுத்தவில்லை.

    இதையடுத்து, டெல்லி மேல்-சபையில் இந்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு பதிலாக இன்று தாக்கல் செய்யப்படுகிறது.



    மசோதாவை அப்படியே நிறைவேற்ற முயற்சிக்காமல், மேல்-சபை தேர்வுக்குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை மட்டுமின்றி, பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் வற்புறுத்தி வருகிறது.

    ஆனால், மக்களவையில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டு விட்டதால், எந்த குழுவுக்கும் அனுப்பத் தேவையில்லை என்று மத்திய அரசு கூறி வருகிறது.

    இந்நிலையில், மசோதா தொடர்பாக முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு மத்திய அரசு நேற்று பகிரங்க வேண்டுகோள் விடுத்தது.

    இதுகுறித்து பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி அனந்த குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முத்தலாக் மசோதா, டெல்லி மேல்-சபையில் புதன்கிழமை (இன்று) தாக்கல் செய்யப்படக்கூடும். மசோதா சுமுகமாக நிறைவேறும் என்று நம்புகிறோம்.

    இதுதொடர்பாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். மக்களவையில் இந்த மசோதா மீது காங்கிரஸ் கட்சி எந்த திருத்தத்தையும் வற்புறுத்தாமல் இருந்ததுபோல், டெல்லி மேல்-சபையிலும் எந்த திருத்தத்தையும் வற்புறுத்த வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியிடம் சொல்லி இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதே சமயத்தில், டெல்லி மேல்-சபை காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரி கூறுகையில், “பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கு காங்கிரஸ் எப்போதும் ஆதரவு அளிக்கும். அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கு குறுக்கே நிற்க மாட்டோம். ஆனால், மசோதாவில் என்னென்ன சேர்க்கப்பட்டுள்ளது என்று பார்க்க வேண்டியுள்ளது” என்றார்.

    #tamilnews #Muthalaq #MuthalaqBan 
    Next Story
    ×