என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நீதி கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது: கனிமொழி பேட்டி
புதுடெல்லி:
2ஜி வழக்கில் விடுதலை என நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பை அறிவித்ததும் கோர்ட்டில் இருந்த கனிமொழி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
கோர்ட்டுக்கு வெளியே கூடி இருந்த தி.மு.க.வினரைப் பார்த்து கை அசைத்தார். விடுதலையானது குறித்து கனிமொழி கூறியதாவது:-
நீண்ட போராட்டத்துக்கு பிறகு நியாயம் - நீதி வென்று இருக்கிறது. எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தனிப்பட்ட முறையில் நான் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தேன். 7 ஆண்டு காலமாக மறுபடியும் மறுபடியும் வழக்கு விசாரணை என்று பல அவமானங்களையும், அவமரியாதைகளையும் சந்திக்க வேண்டியிருந்தது.
இதனால் பெரிய அழுத்தம் இருந்தது. இப்போது நிம்மதி கிடைத்துள்ளது. இது பொய் வழக்கு என்று தி.மு.க. கூறி வந்ததற்கு நியாயம் கிடைத்து இருக்கிறது.
தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. அப்பீல் செய்தால் அதையும் நாங்கள் எதிர்கொள்வோம்.
இவ்வாறு கனிமொழி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்