search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை விமான நிலையத்தில் 11 ஐபோன் ‘X’ பறிமுதல்: சுங்கத்துறை நடவடிக்கை
    X

    மும்பை விமான நிலையத்தில் 11 ஐபோன் ‘X’ பறிமுதல்: சுங்கத்துறை நடவடிக்கை

    ஹாங்காங் நாட்டிலிருந்து மும்பைக்கு வந்த பயணியிடம் இருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய 11 ஐபோன் ‘X’-களை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    மும்பை:

    ஹாங்காங் நாட்டிலிருந்து மும்பைக்கு நேற்றிரவு வந்த விமானத்தில் பாவேஷ் ராவ்ஜிபாய் விரானி என்பவர் தன்னுடன் சமீபத்தில் வெளியான 11 ஐபோன் ‘X’-களை கொண்டு வந்துள்ளார். அவரது உடமைகளை சோதித்த விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடமிருந்த போன்களை பறிமுதல் செய்தனர்.

    விரானியை கைது செய்த அதிகாரிகள், பறிமுதல் செய்த போன்களின் சந்தை மதிப்பு 10 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் என தெரிவித்தனர். எதற்காக அவர் இத்தனை போன்களை எடுத்து வந்தார்? என்று விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐபோன் ‘X’ வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×