search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் தமிழக விவசாயிகள் 70-வது நாளாக போராட்டம்
    X

    டெல்லியில் தமிழக விவசாயிகள் 70-வது நாளாக போராட்டம்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று 70-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுடெல்லி:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று 70-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையொட்டி பிரதமர் மோடி, விவசாயிகளின் கஷ்டத்தை உணராமல் அவர்களது தோளில் ஏறி குதிரை சவாரி செய்வதாக நாடகம் நடத்தினர். அதாவது, மோடி போன்று உடை, முகமூடி அணிந்த ஒருவரை மற்றொரு விவசாயி தனது தோளில் சுமக்க, பிற விவசாயிகள் கோஷமிட்டவாறு ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தினர். 
    Next Story
    ×