search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ‘சிலீப்பர் செல்’கள் வெளியே வருவார்கள்- தினகரன் பேட்டி
    X

    நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ‘சிலீப்பர் செல்’கள் வெளியே வருவார்கள்- தினகரன் பேட்டி

    நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது சிலீப்பர் செல்கள் வெளியே வருவார்கள் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    எங்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்காததற்கு காரணம் போகப் போக உங்களுக்கு தெரியவரும். தமிழகம் முழுவதும் நிறைய வாக்குச்சாவடிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஜீரோ வாக்குகள் பதிவாகி இருக்கின்றது என்று தகவல்கள் வந்தன.

    300 வாக்குசாவடிகளில் ஜீரோ வாக்குகள் பதிவானதாக எனக்கு தகவல் கிடைத்தது. எங்கள் முகவர்களே அங்கு இருக்கிறார்கள். ஒரு வாக்குச்சாவடியில் குறைந்த பட்சம் 4 பேர் எங்கள் முகவர்கள் இருப்பார்கள். அந்த 4 ஓட்டுக்களாவது இருக்க வேண்டும் அல்லவா? மக்களும், கட்சிக்காரர்களும் ஓட்டு போடாவிட்டாலும் பூத் ஏஜெண்டுகளின் ஓட்டுகள் எங்கே போனது? அதுதான் எங்களுக்கு தெரியவில்லை.

    ஜீரோ வாக்குகள் பதிவானதாக இணையதளத்தில் போடப்பட்டிருப்பது தொடர்பாக வருங்காலத்தில் தேர்தல் ஆணையம்தான் பதில் சொல்ல வேண்டும்.

    கேள்வி:- எடப்பாடி பழனிசாமி ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவேன் என்றீர்கள். அது தவிர்க்கப்பட்டிருக்கிறதா?

    பதில்:- கழுத்தை நெரிக்கும் வகையில் சரியாக 9 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளார்கள். அரசியலில் எது வேண்டு மானாலும் நடக்கலாம். இந்த ஆட்சி முடிவை நோக்கி போய்க்கொண்டிருப்பது நன்றாக தெரிகிறது.

    கேள்வி:- அ.ம.மு.க. தமிழகம் முழுக்க அதிக ஒட்டுகள் வாங்கவில்லையே ஏன்?

    பதில்:- அதற்கான காரணம் சிலருக்கு இப்போதே தெரியும். ஒருவாக்குச்சாவடியில் ஜீரோ பதிவாகி இருப்பதால் ஏஜெண்டே ஓட்டு போடவில்லை என்று சொல்கிறீர்களா? இதை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல முடியாது.

    கேள்வி:- அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை மக்கள் நம்பவில்லை என்று எடுத்துச் கொள்ளலாமா?

    பதில்: இதுபற்றி தேர்தல் ஆணையம்தான் பதில் சொல்ல வேண்டும்.

    பதில்:- ஓட்டு போட்டவர்கள் அனைவரும் பார்த்திருக்க மாட்டார்கள்.

    கேள்வி:- அ.ம.மு.க.வில் உள்ள அ.தி.மு.க. சிலீப்பர் செல்கள் ஆக்டிவேட் ஆகி விட்டார்களா?

    பதில்: எங்கள் வாக்குச் சாவடி ஏஜெண்டுகள் ஓட்டு போடாத இடங்களில் சிலீப்பர் செல் என்று எடுத்துக்கொள்கிறீர்களா? எங்களது சிலீப்பர் செல்கள் ஓட்டெடுப்பின்போது வெளியே வருவார்கள்.

    கேள்வி: அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணைய வேண்டும் என்று கூறி இருக்கிறார்களே?

    பதில்: யாரும் போக வேண்டும் என்றால் போவார்கள். அதில் என்ன இருக்கிறது. 10 பேர் போவதால் கட்சி அழிந்து விடும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்களா செந்தில் பாலாஜி தி.மு.க.வுக்கு சென்று வெற்றி பெற்றிருப்பது அவரது புத்திசாலித்தனம்.


    அ.தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவேன் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயம் இருக்கிறது. ஒரு ஓட்டில்தான் அவர்கள்.

    கேள்வி: தேர்தல் தோல்வி பற்றி என்ன சொல்கிறீர்கள்?

    பதில்: மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×