search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது முறையாக பிரதமர் ஆகும் மோடிக்கு விஜயகாந்த் வாழ்த்து
    X

    2-வது முறையாக பிரதமர் ஆகும் மோடிக்கு விஜயகாந்த் வாழ்த்து

    2019 பாராளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு 2வது முறையாக பிரதமராக பதவியேற்கவிருக்கும் மோடிக்கு விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. துவக்கம் முதலே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

    ஆட்சியமைக்க தேவையான 272 தொகுதிகளை விட அதிகளவில் பாஜக கூட்டணி பெற்றுவிடும் என தெரிகிறது.

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். டுவிட்டரில் கூறியுள்ளதாவது:-

    2019 பாராளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு 2வது முறையாக பாரத பிரதமராக பதவியேற்கவிருக்கும் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு தேமுதிக சார்பில் எனது இதயமார்ந்த வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அதே நேரத்தில் தமிழகத்தில் பாஜக- அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள தேமுதிக, போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×