search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வெற்றி? தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள்
    X

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வெற்றி? தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள்

    தமிழகத்தில் 38 பாராளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை தந்தி டிவி வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்? என்பதை காணலாம்.
    தமிழகத்தில் 38 பாராளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை தந்தி டிவி வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் பல்வேறு இடங்களில் தேர்தல் அன்று வாக்களித்த மக்களை சந்தித்து, அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கேட்டறிந்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. விபரம்:-



    திருவள்ளூர் தொகுதி


    திருவள்ளூர் மக்களவை தொகுதியில் அதிமுக வெற்றிப்பெற வாய்ப்பு உள்ளது என தெரிகிறது. தேர்தலுக்கு பின்னர் 39-45 சதவீதம் பேர் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்ததாக கூறியுள்ளனர். திமுகவிற்கு 35-41 சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர்.  அமமுகவிற்கு என்று 7-10 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். மக்கள் நீதி மய்யத்திற்கு 4-7 சதவீதம் பேரும், நாம் தமிழருக்கு 3-6 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

    மத்திய சென்னை


    மத்திய சென்னையில் திமுக கூட்டணிக்கு வாக்களித்ததாக 38-44 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அதிமுக கூட்டணிக்கு 35-41 சதவீத பேர் வாக்களித்ததாகவும், அமமுகவிற்கு 8-11 சதவீத பேர் வாக்களித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.  மக்கள் நீதி மய்யத்திற்கு 6-9 சதவீதம் பேரும், நாம் தமிழருக்கு 5-8 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

    கன்னியாகுமரி

    கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் அதிமுக - பா.ஜனதா கூட்டணிக்கு 40-46 சதவீதம் பேர் வாக்களித்ததாக கூறியுள்ளனர். திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு 39-45 சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர்.  அமமுகவிற்கு என்று 5-8 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். மக்கள் நீதி மய்யத்திற்கு 4-7 சதவீதம் பேரும், நாம் தமிழருக்கு 3-6 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக கூட்டணி முன்னிலைப் பெறுகிறது.  அதிமுக - பா.ஜனதா கூட்டணிக்கு  39- 45 சதவீதம் பேர் வாக்களித்ததாக கூறியுள்ளனர். திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு 36-42 சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர்.  அமமுகவிற்கு என்று 4-10 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.  

    வடசென்னை

     வடசென்னை மக்களவை தொகுதியில் திமுக வெற்றிப்பெறுவதற்கு வாய்ப்புள்ளது என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

    வடசென்னை தொகுதியில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 41-47 சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர்.  அதிமுக - பா.ஜனதா கூட்டணிக்கு 34-40 சதவீதம் பேரும், அமமுகவிற்கு என்று 6-9 சதவீதம் பேரும், மக்கள் நீதி மய்யத்திற்கு என  6-9 சதவீதம் பேரும், நாம் தமிழருக்கு 4-7 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

    சேலம் தொகுதி

    முதல்-அமைச்சர் பழனிச்சாமியின் சொந்த ஊரான சேலம் தொகுதியில் அதிமுக கூட்டணி வெற்றிப்பெற வாய்ப்பு உள்ளது என தெரிகிறது. சேலம் தொகுதியில் அதிமுக - பா.ஜனதா கூட்டணிக்கு வாக்களித்ததாக 41-47 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 38-44 சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர்.   அமமுகவிற்கு என்று 6-9 சதவீதம் பேரும், மக்கள் நீதி மய்யத்திற்கு என 4-7 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

    அரக்கோணம் 

    அரக்கோணம் தொகுதியில் திமுக- அதிமுக கூட்டணிகள் இடையே கடுமையான போட்டி இருக்கும் என தெரிகிறது. இங்கு அதிமுக - பா.ஜனதா கூட்டணிக்கு வாக்களித்ததாக 38-44 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 37-43 சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர்.   அமமுகவிற்கு என்று 7-10 சதவீதம் பேரும், மக்கள் நீதி மய்யத்திற்கு என 4-7 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 
    Next Story
    ×