என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சூலூர்- அரவக்குறிச்சியில் ப.சிதம்பரம் இன்றும் நாளையும் பிரசாரம்
Byமாலை மலர்9 May 2019 4:32 AM GMT (Updated: 9 May 2019 4:32 AM GMT)
சூலூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் இன்றும், நாளையும் பிரசாரம் செய்கிறார். #TNByPolls #PChidambaram
சென்னை:
சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சூலூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் இன்றும், நாளையும் பிரசாரம் செய்கிறார்.
சூலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து கருமத்தம்பட்டியில் இன்று மாலை 6 மணிக்கு தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.
அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து வேலாயுதம்பாளையத்தில் நாளை (10-ந்தேதி) மாலை 6 மணிக்கு தேர்தல் பிரசார பொதுகூட்டம் நடக்கிறது. இதிலும் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் கலந்துகொண்டு பேசுகிறார்கள். #TNByPolls #PChidambaram
சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சூலூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் இன்றும், நாளையும் பிரசாரம் செய்கிறார்.
சூலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து கருமத்தம்பட்டியில் இன்று மாலை 6 மணிக்கு தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.
அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து வேலாயுதம்பாளையத்தில் நாளை (10-ந்தேதி) மாலை 6 மணிக்கு தேர்தல் பிரசார பொதுகூட்டம் நடக்கிறது. இதிலும் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் கலந்துகொண்டு பேசுகிறார்கள். #TNByPolls #PChidambaram
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X