search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4 தொகுதி இடைத்தேர்தல் - தினகரன் பிரசாரத்தை மே 1-ந் தேதி தொடங்குகிறார்
    X

    4 தொகுதி இடைத்தேர்தல் - தினகரன் பிரசாரத்தை மே 1-ந் தேதி தொடங்குகிறார்

    4 தொகுதியில் இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தை அ.ம.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மே 1-ந் தேதி தொடங்குகிறார். #TNAssemblyElection #TTVDhinakaran
    சென்னை:

    திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 தொகுதிகளின் இடைத்தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அடுத்த மாதம் (மே) 1-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன் விவரம் வருமாறு:-

    திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளர் ஐ.மகேந்திரனை ஆதரித்து, அந்த தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் அடுத்த மாதம் 1, 2, 9 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்கிறார். அதே போல், அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளர் பி.எச்.சாகுல் ஹமீதை ஆதரித்து 3, 4, 10, 14 ஆகிய தேதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    திருப்பரங்குன்றம் மகேந்திரன் -  ஓட்டப்பிடாரம் சுந்தரராஜ்

    ஓட்டப்பிடாரம் தொகுதி வேட்பாளர் ஆர்.சுந்தரராஜை ஆதரித்து 5, 6, 11, 15 ஆகிய தேதிகளில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இதே போல் சூலூர் தொகுதிக்குபட்ட பகுதிகளில் அ.ம.மு.க. வேட்பாளர் கே.சுகுமாருக்காக 7, 8, 12, 13 ஆகிய தேதிகளில் வாக்கு சேகரிக்கிறார்.

    மேற்கூறிய தகவல்கள் அ.ம.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TNAssemblyElection #TTVDhinakaran
    Next Story
    ×