search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்கு இயந்திரம் பழுதான இடங்களில் வாக்குப்பதிவை நீட்டிக்க காங். வலியுறுத்தல்
    X

    வாக்கு இயந்திரம் பழுதான இடங்களில் வாக்குப்பதிவை நீட்டிக்க காங். வலியுறுத்தல்

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. #TNElections2019 #TNCongress #EVMMalfunctions
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுவையில் 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். ஆனால் பல்வேறு பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்ததால் வாக்குப்பதிவு தாமதம் ஆனது. சில வாக்குச்சாவடிகளில் மணிக்கணக்கில் தாமதம் ஆனதால், வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள் திரும்பிச் சென்றனர். பழுதடைந்த பகுதிகளில் 384 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 692 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் (விவிபேட்) மாற்றப்பட்டுள்ளன. 

    இந்நிலையில், மேலும் பல வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்திருப்பதாகவும், அந்த இயந்திரங்களை மாற்ற வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இயந்திரங்கள் பழுதான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் தாமோதரன், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். #TNElections2019 #TNCongress #EVMMalfunctions
    Next Story
    ×