என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாக்குச்சாவடிகளை அதிமுகவினர் கைப்பற்ற திட்டம்- திமுக புகார்
Byமாலை மலர்18 April 2019 10:18 AM GMT (Updated: 18 April 2019 10:18 AM GMT)
பிற்பகல் 3 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அதிமுகவினர் திட்டமிட்டிருப்பதாக திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #TNElections2019 #DMKFilesComplaint
சென்னை:
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே சிறுசிறு பிரச்சனைகள் தவிர பெரிய அளவிலான மோதல்கள் எதுவும் இல்லாமல் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திமுக சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், இன்று மதியம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் காவல்துறை இயக்குனருக்கு (தேர்தல்) அவசர கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
இதற்கு காவல்துறையினரும் ஒத்துழைப்பு தரும் வகையில், காவல் துறையின் பாதுகாப்பினை திரும்ப பெற திட்டமிட்டுள்ளதாகவும் வாக்குச்சாவடிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை அந்த நேரத்தில் செயலிழக்க செய்யப்போவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
இதனை தேர்தல் ஆணையம் உடனடியாக தடுத்து நிறுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TNElections2019 #DMKFilesComplaint
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே சிறுசிறு பிரச்சனைகள் தவிர பெரிய அளவிலான மோதல்கள் எதுவும் இல்லாமல் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திமுக சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், இன்று மதியம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் காவல்துறை இயக்குனருக்கு (தேர்தல்) அவசர கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு துவங்கிய காலை முதலே வாக்காளர்கள் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பெருந்திரளாக வாக்களித்து வருவதை பொறுத்துக்கொள்ள முடியாத ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மாலை 3.30 மணிக்கு மேல் தமிழகத்தில் உள்ள பல்வேறு தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இதற்கு காவல்துறையினரும் ஒத்துழைப்பு தரும் வகையில், காவல் துறையின் பாதுகாப்பினை திரும்ப பெற திட்டமிட்டுள்ளதாகவும் வாக்குச்சாவடிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை அந்த நேரத்தில் செயலிழக்க செய்யப்போவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
இதனை தேர்தல் ஆணையம் உடனடியாக தடுத்து நிறுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TNElections2019 #DMKFilesComplaint
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X