என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பறக்கும் படை சோதனையில் டாஸ்மாக் வசூல் ரூ.4½ லட்சம் பறிமுதல்
போரூர்:
பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர், பணம்-பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கே.கே.நகர் பி.டி. ராஜன் சாலை அண்ணா மெயின் ரோடு சந்திப்பில் நேற்று நள்ளிரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.4 லட்சத்து 66 ஆயிரம் ரொக்கம் இருந்தது. உடனடியாக பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்து உதவி தேர்தல் அலுவலர் பிரகதீஷ் ஈஸ்வரி விசாரணை நடத்தினார். காரில் இருந்த 2 பேரும் டாஸ்மாக் ஊழியர்கள் என்பதும், விருகம்பாக்கம் ஏரிக்கரையில் உள்ள டாஸ்மாக் வசூல் பணத்தை கட்டுவதற்காக காரில் எடுத்து வந்ததும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து டாஸ்மாக் ஊழியர்கள் உரிய ஆவணங்கள் கொண்டு வந்தனர். அனைத்தையும் சரி பார்த்த பின்னர் பணத்தை அதிகாரிகள் திரும்ப ஒப்படைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்