என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விவசாயி சின்னத்தை மறைப்பதால் வெற்றியை தடுக்க முடியாது - சீமான்
Byமாலை மலர்16 April 2019 6:59 AM GMT (Updated: 16 April 2019 7:35 AM GMT)
ஓட்டுப்பதிவு எந்திரத்தில் விவசாயி சின்னத்தை மறைப்பதால் எங்கள் வெற்றியை தடுத்து விட முடியாது என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார். #Seeman
சென்னை:
பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.
அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி, தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி ஆகியவற்றுடன் போட்டி போட்டுக் கொண்டு சீமான் பிரசாரம் செய்தார்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்தை மங்கலாக கண்ணுக்கு தெரியாத வகையில் தேர்தல் ஆணையம் அச்சிட்டுள்ளதாக நாம்தமிழர் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நாம் தமிழர் கட்சி வழக்கு தொடர்ந்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு சின்னங்கள் அடங்கிய பட்டியல் அச்சடிக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்து விட்டதாக கூறி, நாம் தமிழர் கட்சியின் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக சீமான் அளித்த பேட்டி வருமாறு:-
விவசாயி சின்னத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விட்டோம். ஆனால் ஓட்டுப்பதிவு எந்திரத்தில் சின்னம் சிறியதாக உள்ளது. இதனால் எங்கள் வெற்றியை தடுத்து விட முடியாது.
தமிழகம் முழுவதும் மக்கள் எங்களை ஆதரித்து வருகிறார்கள். இதனால் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம்.
இந்த விவகாரத்தை பொறுத்தவரையில், ஆளும் அதிகார வர்க்கத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம், அடிபணிந்து விட்டது.
இவ்வாறு சீமான் கூறினார். #Seeman
பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.
அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி, தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி ஆகியவற்றுடன் போட்டி போட்டுக் கொண்டு சீமான் பிரசாரம் செய்தார்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்தை மங்கலாக கண்ணுக்கு தெரியாத வகையில் தேர்தல் ஆணையம் அச்சிட்டுள்ளதாக நாம்தமிழர் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நாம் தமிழர் கட்சி வழக்கு தொடர்ந்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு சின்னங்கள் அடங்கிய பட்டியல் அச்சடிக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்து விட்டதாக கூறி, நாம் தமிழர் கட்சியின் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக சீமான் அளித்த பேட்டி வருமாறு:-
தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி வளர்ச்சி அடைந்துள்ளது. அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டு களம் கண்டதால் நாம் தமிழர் கட்சியின் பலம் அதிகரித்துள்ளது. இந்த தேர்தலில் நாங்கள் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம்.
விவசாயி சின்னத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விட்டோம். ஆனால் ஓட்டுப்பதிவு எந்திரத்தில் சின்னம் சிறியதாக உள்ளது. இதனால் எங்கள் வெற்றியை தடுத்து விட முடியாது.
தமிழகம் முழுவதும் மக்கள் எங்களை ஆதரித்து வருகிறார்கள். இதனால் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம்.
இந்த விவகாரத்தை பொறுத்தவரையில், ஆளும் அதிகார வர்க்கத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம், அடிபணிந்து விட்டது.
இவ்வாறு சீமான் கூறினார். #Seeman
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X