search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்போரூர் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பு
    X

    திருப்போரூர் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பு

    காஞ்சிபுரம் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல், திருப்போரூர் சட்ட மன்ற வேட்பாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் ஆகியோர் முட்டுக்காடு, தையூர் உள்ளிட்ட பல கிராமங்களில் வாக்குகள் சேகரித்தனர். #LoksabhaElections2019

    திருப்போரூர்:

    காஞ்சிபுரம் பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல், திருப்போரூர் சட்ட மன்ற வேட்பாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் ஆகியோர் திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாவலூர், முட்டுக்காடு, படூர், கேளம்பாக்கம், தையூர் உள்ளிட்ட பல கிராமங்களில் வாக்குகள் சேகரித்தனர்.

    ஒவ்வொரு கிராமத்திலும் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், கூட்டணி கட்சியினர் திரண்டு வந்து மேள தாளத்துடன் ஆளுயுர மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்.

    வேட்பாளர்கள் பொதுமக்களிடம் இரட்டை இலைக்கு வாக்களித்து நாங்கள் வெற்றிபெற்றால் இப்பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மற்றும் மத்திய, மாநில அரசின் திட்டங்கள் கிராமப்புற மக்களையும் சென்றடைய பாடுபடுவோம் மேலும் தங்கள் பகுதி குறைகளை நேரிடையாக சந்தித்து தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

    தையூரில் ஜேபி எந்திரம் மூலம் மலர்தூவி வேட்பாளர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். முன்னாள் எம்.பி காஞ்சி பன்னீர்செல்வம், பா.ம.க. ஏகாம்பரம், வாசு, தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் அனகை முருகேசன், மாவட்ட துணைசெயலாளர் எஷ்வந்த்ராவ், மாவட்ட அம்மாபேரவை ஆனூர் பக்தவச்சலம், மாவட்ட வர்த்தக பிரிவு ராகவன், திருப்போரூர் ஒன்றியசெயலாளர் தையூர் குமரவேல், நாவலூர் ரகு, முட்டுக்காடு பாஸ்கரன், கேளம்பாக்கம் வினோத்கண்ணன், தையூர் ராஜா, த.மா.கா கோவிந்தராஜ், பிஜேபி கோதண்டன், புரட்சி பாரதம் சிவலிங்கம்;, தே.மு.தி.க. ஒன்றியசெயலாளர் கோபிநாத், உள்ளிட்ட கூட்டணி கட்சிநிர்வாகிகள், தொண்டர்கள் வேட்பாளருடன் சென்று வாக்குகள் சேகரித்தனர். #LoksabhaElections2019

    Next Story
    ×