என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புதுவையின் நிதிச்சுமைக்கு மூல காரணம் ரங்கசாமிதான்- நமச்சிவாயம் கடும் தாக்கு
புதுச்சேரி:
புதுவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
மணவெளி தொகுதிக்குட்பட்ட நோணாங்குப்பம், எடையார்பாளையம், தவளகுப்பாம், தானாம்பாளையம், பூரணாங்குப்பம், அபிஷேகப் பாக்கம் உள்ளிட்ட பகுதியில் திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
புதுவையில் காங்கிரஸ் ஆட்சிக்கு இன்னும் 2 ஆண்டு காலம் உள்ளது. இலவச அரிசி, முதியார் பென்ஷன், சென்டாக் உதவித்தொகை தங்கு தடையின்றி கிடைக்க மத்தியில் ராகுல்காந்தி பிரதமர் ஆக வேண்டும். புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவதாக ராகுல்காந்தி உறுதியளித்துள்ளார். மக்கள் மீது அக்கறையும், பரிவும் கொண்ட கூட்டணி காங்கிரஸ் கூட்டணி.
இந்தியாவை மீண்டும் ஒரு முறை நரேந்திர மோடி ஆட்சி செய்ய அனுமதித்தால் அனைவரும் அடிமையாகி விடுவோம். என்ஆர்.காங்கிரஸ் பயந்துபோய் பா.ஜனதாவோடு கூட்டணி அமைத்துள்ளது. கடந்த காலங்களில் மக்கள் பிரச்சினைகளை பற்றி எந்த கவலையும்படாத ரங்கசாமி தேர்தல் என்றவுடன் மக்களிடம் வந்துள்ளார்.
புதுவை நிதி சுமையில் சிக்கி தவிக்க மூல காரணமானவரே ரங்கசாமிதான். எனவே அனுபவம் வாய்ந்த காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச்செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தின்போது அமைச்சர் கந்தசாமி, அரசு கொறடா அனந்தராமன் மற்றும் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்