search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடசென்னை பாராளுமன்ற தொகுதியில் ஏ.ஜி.மவுரியா தீவிர ஓட்டு வேட்டை
    X

    வடசென்னை பாராளுமன்ற தொகுதியில் ஏ.ஜி.மவுரியா தீவிர ஓட்டு வேட்டை

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் வடசென்னை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரான முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஏ.ஜி.மவுரியா ராயபுரம், கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சென்று ‘டார்ச் லைட்’ சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். #LokSabhaElections2019 #MakkalNeedhiMaiam

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் வடசென்னை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரான முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஏ.ஜி.மவுரியா நேதாஜி நகர் மற்றும் காசிமேடு சி.ஜி. காலனி, ராயபுரம், கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று ‘டார்ச் லைட்’ சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவரை மக்கள் எழுச்சியுடன் வரவேற்றனர். வாங்கய்யா... வாங்க... மாற்றத்துக்காகத்தான் காத்திருக்கிறோம் என்று கூறி வாழ்த்து தெரிவித்தனர்.

    30 ஆண்டுகளாக குடிநீருக்காக குடத்துடன் ரோட்டில் காத்துக்கிடக்கிறோம் என்று பெண்கள் முறையிட்டனர். அவர்களிடம் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரான என்னை வெற்றி பெற செய்யுங்கள். இலவச குடிநீர் வீடு தேடி வரும் என்று மவுரியா உறுதி அளித்தார்.

    கொருக்குப்பேட்டை குப்பை மேட்டால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களை காக்க மக்கள் நீதி மய்யம் புதிய திட்டம் வகுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குப்பை மேட்டால் மாசு பட்டுள்ள நிலத்தடி நீரை மாற்ற குப்பையில் இருந்து மின்சாரம், உரம் தயாரிக்கப்படும் குப்பைமேடு இருக்கும் பகுதியில் மழைநீர் சேகரிப்பு மையங்களை சேகரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். மக்களின் மன மாற்றம் நிச்சயம் வெற்றியை தேடித்தரும் என்றும் மவுரியா தெரிவித்தார். #LokSabhaElections2019 #MakkalNeedhiMaiam

    Next Story
    ×