என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆளும் கட்சியினர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
Byமாலை மலர்6 April 2019 12:08 AM GMT (Updated: 6 April 2019 12:21 AM GMT)
பணத்தை அள்ளிக்கொண்டு செல்லும் ஆளும் கட்சியினர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை என்று டி.டி.வி.தினகரன் கூறினார். #TTVDinakaran
திருச்சி:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர்களை விமர்சனம் செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது அதிகார துஷ்பிரயோகம். அவர்களுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. இப்படி எல்லாம் பேசினால் மக்களிடம் எடுபட்டு விடும் என்ற பயத்தில் வழக்கு போடுகிறார்கள்.
ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்து பேசி இருக்கிறார்கள். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. அ.தி.மு.க.வினர் தேர்தலில் தோற்கப்போகிறார்கள். நிறைய தொகுதிகளில் ‘டெபாசிட்’ இழக்கப்போகிறார்கள்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், தேர்தல் ஜனநாயக முறையில் நடக்குமா? தி.மு.க.வினர் வீடுகளில் மட்டும் தான் சோதனை நடத்தப்பட்டு உள்ளது என்றும் கேட்கிறீர்கள். துரைமுருகன் வீட்டில் பணம் வைத்து இருந்தது தவறு தான். அதே நேரத்தில் தேர்தல் ஆணையமும், பறக்கும் படையினரும் எதிர்க்கட்சியினரிடம் மட்டுமே சோதனை நடத்தி இருக்கிறார்கள்.
ஆளும் கட்சியினர் லோடு, லோடாக பணம் அள்ளிக்கொண்டு செல்கிறார்கள். அவர்களை பிடிக்காமல் விட்டு விடுகிறார்கள் என்பது தான் குற்றச்சாட்டு. யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளும் கட்சிக்கு ஒரு அளவு கோல், எதிர்க்கட்சிக்கு என்று ஒரு அளவு கோல் வைப்பது தவறு.
இவ்வாறு அவர் கூறினார். #TTVDinakaran
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர்களை விமர்சனம் செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது அதிகார துஷ்பிரயோகம். அவர்களுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. இப்படி எல்லாம் பேசினால் மக்களிடம் எடுபட்டு விடும் என்ற பயத்தில் வழக்கு போடுகிறார்கள்.
ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்து பேசி இருக்கிறார்கள். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. அ.தி.மு.க.வினர் தேர்தலில் தோற்கப்போகிறார்கள். நிறைய தொகுதிகளில் ‘டெபாசிட்’ இழக்கப்போகிறார்கள்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், தேர்தல் ஜனநாயக முறையில் நடக்குமா? தி.மு.க.வினர் வீடுகளில் மட்டும் தான் சோதனை நடத்தப்பட்டு உள்ளது என்றும் கேட்கிறீர்கள். துரைமுருகன் வீட்டில் பணம் வைத்து இருந்தது தவறு தான். அதே நேரத்தில் தேர்தல் ஆணையமும், பறக்கும் படையினரும் எதிர்க்கட்சியினரிடம் மட்டுமே சோதனை நடத்தி இருக்கிறார்கள்.
ஆளும் கட்சியினர் லோடு, லோடாக பணம் அள்ளிக்கொண்டு செல்கிறார்கள். அவர்களை பிடிக்காமல் விட்டு விடுகிறார்கள் என்பது தான் குற்றச்சாட்டு. யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளும் கட்சிக்கு ஒரு அளவு கோல், எதிர்க்கட்சிக்கு என்று ஒரு அளவு கோல் வைப்பது தவறு.
இவ்வாறு அவர் கூறினார். #TTVDinakaran
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X