search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆளும் கட்சியினர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
    X

    ஆளும் கட்சியினர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

    பணத்தை அள்ளிக்கொண்டு செல்லும் ஆளும் கட்சியினர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை என்று டி.டி.வி.தினகரன் கூறினார். #TTVDinakaran
    திருச்சி:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர்களை விமர்சனம் செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது அதிகார துஷ்பிரயோகம். அவர்களுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. இப்படி எல்லாம் பேசினால் மக்களிடம் எடுபட்டு விடும் என்ற பயத்தில் வழக்கு போடுகிறார்கள்.

    ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்து பேசி இருக்கிறார்கள். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. அ.தி.மு.க.வினர் தேர்தலில் தோற்கப்போகிறார்கள். நிறைய தொகுதிகளில் ‘டெபாசிட்’ இழக்கப்போகிறார்கள்.

    இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், தேர்தல் ஜனநாயக முறையில் நடக்குமா? தி.மு.க.வினர் வீடுகளில் மட்டும் தான் சோதனை நடத்தப்பட்டு உள்ளது என்றும் கேட்கிறீர்கள். துரைமுருகன் வீட்டில் பணம் வைத்து இருந்தது தவறு தான். அதே நேரத்தில் தேர்தல் ஆணையமும், பறக்கும் படையினரும் எதிர்க்கட்சியினரிடம் மட்டுமே சோதனை நடத்தி இருக்கிறார்கள்.

    ஆளும் கட்சியினர் லோடு, லோடாக பணம் அள்ளிக்கொண்டு செல்கிறார்கள். அவர்களை பிடிக்காமல் விட்டு விடுகிறார்கள் என்பது தான் குற்றச்சாட்டு. யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளும் கட்சிக்கு ஒரு அளவு கோல், எதிர்க்கட்சிக்கு என்று ஒரு அளவு கோல் வைப்பது தவறு.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDinakaran
    Next Story
    ×