search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொய் பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் - முதலமைச்சர் குற்றச்சாட்டு
    X

    பொய் பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் - முதலமைச்சர் குற்றச்சாட்டு

    பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் மு.க.ஸ்டாலினுக்குத்தான் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். #EdappadiPalanisamy
    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று 2-வது நாளாக கோவில்பட்டி, கயத்தாறு, செய்துங்கநல்லூர், ஸ்ரீவை குண்டம், ஆழ்வார்திருநகரி, நாசரேத், சாத்தான்குளம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வர முடியவில்லை என்பதால் ஏதேதோ சொல்லி வருகிறார். அவர் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லி இருக்கிறார். அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதற்காக விருது வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் சட்டம் நல்ல முறையில் பேணி பாதுகாக்கப்படுகிறது. சாதிச் சண்டை, மதச்சண்டை என எந்த சண்டையும் கிடையாது. அதனை வரவும் விட மாட்டோம். வந்தாலும் இரும்பு கரம் கொண்டு அடக்குவோம்.

    ஜெயலலிதா மறைந்தவுடன் கட்சி உடைந்து விடும். ஆட்சி கவிழ்ந்து விடும் என்று மு.க.ஸ்டாலின் நினைத்தார். அது நடக்காததால், பித்து பிடித்தவர் போல் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசிக் கொண்டு இருக்கிறார்.

    கொலை, பாலியல் வழக்கு உள்ளிட்ட கொடுங்குற்றங்களுக்கு தி.மு.க. நிர்வாகிகள் ஜாமீன் கொடுக்கின்றனர். இதனால் அவர்களுக்கு இடையே தொடர்பு இருப்பது தெரிய வந்து உள்ளது. கோடநாடு கூலிப்படையினருக்கு மு.க.ஸ்டாலின் துணை போகிறார். இதனால் அவருக்கு கூலிப்படை தலைவன் என்று பெயர் வைத்துக் கொள்ளலாம்.


    செய்துங்கநல்லூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்த போது எடுத்தபடம்

    இப்படிப்பட்ட தலைவர்கள் வந்தால் எதிர்காலத்தில் நாடு என்ன ஆகும். ஒரு எதிர்க்கட்சியாக இருக்கும் போதே, முதலமைச்சர் மீது பொய் குற்றச்சாட்டு கூறுகிறார்கள் என்றால் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள். அவர்களின் அராஜகத்துக்கு அரசு முடிவு கட்டும்.

    தமிழகத்தில் ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். ஆனால் மு.க.ஸ்டாலின் எந்த திட்டமும் செய்யவில்லை என்று பொய்யாக பேசி வருகிறார். பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் மு.க.ஸ்டாலினுக்குத்தான் கொடுக்க வேண்டும்.

    ஜெயலலிதா மறைந்தாலும் அவர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது. ஆனால் தி.மு.க.வினர் சொன்னதை இதுவரை நிறைவேற்றியது இல்லை. நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்போம் என்று சொன்னார்கள். எந்த விவசாயிக்கு கொடுத்து இருக்கிறார்கள்.

    தி.மு.க.வினர் வேண்டும் என்றே திட்டமிட்டு பொய்களை சொல்லி தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வாக்கு சேகரிக்கிறார்கள். ஆனால் அ.தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளது. இந்தியாவிலேயே மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் மாநிலம் தமிழ்நாடு தான். பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் வீடு இல்லா ஏழைகளுக்கு அடுக்குமாடி காங்கிரீட் வீடு கட்டி கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. 14 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    அ.தி.மு.க. ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு முழு பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. நீர் மேலாண்மைக்காக 4 ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர்கள் அடங்கிய குழு அமைத்து தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து வருகின்றனர். அதன் மூலம் நீர் மேலாண்மை திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார். #EdappadiPalanisamy #ADMK #MKStalin
    Next Story
    ×