என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நான் வெற்றிபெற்றால் கெட்டது பண்றவர்களுக்கு கெட்டது செய்வேன்- மன்சூர்அலிகான் காமெடி
திண்டுக்கல்:
பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
அவரது பிரசாரம் திண்டுக்கல் தொகுதி மக்களுக்கு சுவாரசியமாக மாறி இருக்கிறது. திரையில் பார்ப்பது போலவே காமெடியாக பேசி மக்களை சிரிக்க வைக்கிறார். வேட்புமனு தாக்கலுக்கு பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
‘‘திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஜவ்வாதுபட்டி என் சொந்த ஊர். நானும் திண்டுக்கல் காரன்தான். நாம் தமிழர் கட்சி சார்பாக நிற்கிறேன். திண்டுக்கல் மாவட்டம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது.
இங்கே மணல் முழுவதையும் அள்ளிட்டாங்க. பொன்மாந்துரை என்கிற கிராமத்துக்கு சென்றேன். அங்கு குடிக்க தண்ணீர்கூட இல்லை. இந்தியாவிலேயே தண்ணீர் இல்லாத கிராமமாக இருக்கிறது. என்னுடைய அலுவலகத்தை அந்தக் கிராமத்தில் தான் அமைக்கப் போகிறேன். அவர்கள் குடிப்பதற்கு தண்ணீருக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
தமிழன்தான் பிரதமராக வரவேண்டும். நான் எம்.பி ஆனால் நாற்காலியில் உட்கார்ந்து சீட்டை துடைத்து விட்டு வர மாட்டேன். எழுந்து நின்றுதான் கேள்வி கேட்பேன். கிராமங்களுக்குப் போகும் பொழுது நிறைய பேர் கேட்கிறார்கள். நீங்க ஜெயிச்சா நல்லது பண்ணுவீங்களான்னு.
நான் நல்லது பண்ண மாட்டேன். கெட்டதுதான் பண்ணுவேன். இந்த ஊருக்கு செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கிறது. கெட்டது பண்றவங்களுக்கு கெட்டது செய்யப்போறேன். பொள்ளாச்சி விஷயத்துல தவறு செய்த அவங்க தலையை வெட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #MansoorAliKhan #naamtamilarkatchi
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்