search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் 6 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தது தேர்தல் பறக்கும் படை
    X

    சென்னையில் 6 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தது தேர்தல் பறக்கும் படை

    சென்னையில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையின்போது, வால்டாக்ஸ் சாலையில் 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #LSPolls #ElectionFlyingSquad
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் முறைகேடுகளைத் தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது.



    இந்நிலையில் சென்னை யானைக்கவுனி, வால்டாக்ஸ் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லோகேஷ் என்பவரிடம் இருந்து 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட அந்த தங்கம், தண்டையார்பேட்டை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. #LSPolls #ElectionFlyingSquad

    Next Story
    ×