search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி. பிரசாரத்தில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.
    X
    திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி. பிரசாரத்தில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.

    தூத்துக்குடியை முதன்மை மாவட்டமாக மாற்ற பாடுபடுவேன்- கனிமொழி பிரசாரம்

    தூத்துக்குடி மாவட்டத்தை கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் முதன்மை மாவட்டமாக மாற்ற பாடுபடுவேன் என்று கனிமொழி பிரசாரம் செய்தார். #LSPolls #DMK #Kanimozhi
    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி., இன்று திருச்செந்தூர் வட்டார பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருச்செந்தூர் கீழரதவீதி தேரடி அருகில் ஓட்டுவேட்டையை தொடங்கிய அவர் தொடர்ந்து பரமன்குறிச்சி பஜார், அய்யனார்நகர், பரமன்குறிச்சி கஸ்பா, வெள்ளாளன்விளை, வட்டன்விளை, குருநாதபுரம், சிறுடையார்புரம், வீரப்ப நாடார் குடியிருப்பு, கரிசன் விளை ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் சென்று வாக்கு சேகரித்தார்.

    அப்போது பொதுமக்கள் மத்தியில் கனிமொழி பேசியதாவது:-

    ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பை மத்திய அரசு அறிவித்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் திண்டாடும் நிலைக்கு ஆளாகி உள்ளனர். எனவே நாடு முன்னேற்றம் அடைய மத்தியில் ராகுல்காந்தி பிரதமராக வரவேண்டும். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமையவேண்டும்.



    தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. அ.தி.மு.க. அரசால் மாவட்டத்தில் எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தை கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் முதன்மை மாவட்டமாக மாற்றவேண்டும். அதற்கு என்னுடைய பங்கும் இருக்கவேண்டும். எனவே எனக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அவர் மெஞ்ஞானபுரம், அணைத்தலை, பூலிக்குடியிருப்பு, நங்கை மொழி, செட்டியப்பத்து, தேரியூர், வேப்பங்காடு அடைக்கலாபுரம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். மதியம் லங்கநாதபுரத்தில் பிரசாரத்தை நிறைவு செய்தார். வேட்பாளர் கனிமொழியுடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. உள்பட பலர் சென்றிருந்தனர். #LSPolls #DMK #Kanimozhi
    Next Story
    ×