search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    படிப்படியாக மதுவிலக்கு ஏன்? அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் விளக்கம்
    X

    படிப்படியாக மதுவிலக்கு ஏன்? அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் விளக்கம்

    தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை அமல்படுத்துவது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். #TNLiquorBan #RajendraBalaji
    ராஜபாளையம்:

    தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வரும் நிலையில், படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்து, அதற்கான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. ஒரு சில பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

    இந்நிலையில், ராஜபாளையம் அருகே ஆசிலாபுரத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அரசின் மதுவிலக்கு நடைமுறை குறித்து விளக்கம் அளித்தார்.



    “மது குடிப்பவர்கள் திடீரென குடியை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும் என்பதால் உடனே பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடியாது. எனவே, குடிப்பவர்களின் உயிரை காப்பாற்றும் பொருட்டு படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும்” என்றார் அமைச்சர்.

    முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிமுகவில் இருந்து விலகியது குறித்து கேட்டபோது, அவர் விலகி சென்றதால் அதிமுகவுக்கு ஒரு ஓட்டுதான் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. #TNLiquorBan #RajendraBalaji
    Next Story
    ×