search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் நிகழ்ச்சியில் தேர்தல் விதிமீறல் இல்லை- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
    X

    ராகுல் நிகழ்ச்சியில் தேர்தல் விதிமீறல் இல்லை- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

    சென்னை கல்லூரியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சியில் தேர்தல் விதிமீறல் இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். #LSPoll #TNCEO
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, சமீபத்தில் சென்னை வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, அரசியல் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு ராகுல் பதில் அளித்தார். ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, கல்லூரி மாணவிகளை வைத்து நிகழ்ச்சி நடத்தியதாக ராகுல் மீது பாஜக புகார் கூறியது.



    இதையடுத்து  ராகுல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது பற்றி விசாரித்து அறிக்கை அளிக்கும்படி இணை இயக்குனருக்கு கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டார். மேலும், மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் கேட்டார்.

    இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சியை நடத்தியதில் தேர்தல் விதிமீறல் இல்லை. கல்லூரி நிர்வாகம் சார்பில் முறையான அனுமதி பெற்றே நிகழ்ச்சி நடத்தப்பட்டிருப்பதாக, மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரித்து அறிக்கை தந்துள்ளார்.

    தேர்தலையொட்டி இதுவரை நடைபெற்ற வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ 6.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #LSPoll #TNCEO
    Next Story
    ×