என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை அருகே பெட்டி பெட்டியாக பிடிபட்டது தங்கம் அல்ல, கவரிங்: ஆய்வு செய்து உறுதி செய்தார் கலெக்டர்
Byமாலை மலர்17 March 2019 9:28 AM GMT (Updated: 17 March 2019 10:51 AM GMT)
மேலூர் சிட்டம்பட்டி சுங்கச்சாவடி அருகே கண்டெய்னர் லாரியில் இருந்து பெட்டி பெட்டியாக பறிமுதல் செய்யப்பட்டவை கவரிங் நகைகள் என உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
மேலூர் சிட்டம்பட்டி சுங்கச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மதுரையில் இருந்து திருச்சி நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. பறக்கும் படையினர் அந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர்.
அப்போது லாரியில் பெட்டி பெட்டியாக கவரிங் நகைகள் இருந்தன. ஆனால், பறக்கும் படையினரால் அது கவரிங் நகைகள் என்று உடனடியாக கண்டறிய முடியவில்லை. தங்கமாக இருக்குமோ? என்ற சந்தேகம் எழும்பியது. அதற்குள் பெட்டி பெட்டியாக தங்க நகைகள் பறிமுதல் என்ற செய்தி அப்பகுதியில் வேகமாக பரவியது.
இதற்கிடையில் பறக்கும் படையினர் கலெக்டருக்கு தகவல் தெரிவித்தனர். பெட்டி பெட்டியாக தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்தி பரவியதால், கலெக்டர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, லாரியில் இருந்த பொருட்களை நகை மதீப்பிட்டாளர்களை வதை்து ஆய்வு செய்தார்.
அப்போது பறிமுதல் செய்யப்பட்டவை கவரிங் நகைகளே!!! என்பது தெரிய வந்தது. மேலும், கடையின் பழைய பொருட்களும் இருந்துள்ளன. இதனால் அப்பகுதியில் ஏற்பட்ட பரபரப்பு அடங்கியது.
அப்போது லாரியில் பெட்டி பெட்டியாக கவரிங் நகைகள் இருந்தன. ஆனால், பறக்கும் படையினரால் அது கவரிங் நகைகள் என்று உடனடியாக கண்டறிய முடியவில்லை. தங்கமாக இருக்குமோ? என்ற சந்தேகம் எழும்பியது. அதற்குள் பெட்டி பெட்டியாக தங்க நகைகள் பறிமுதல் என்ற செய்தி அப்பகுதியில் வேகமாக பரவியது.
இதற்கிடையில் பறக்கும் படையினர் கலெக்டருக்கு தகவல் தெரிவித்தனர். பெட்டி பெட்டியாக தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்தி பரவியதால், கலெக்டர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, லாரியில் இருந்த பொருட்களை நகை மதீப்பிட்டாளர்களை வதை்து ஆய்வு செய்தார்.
அப்போது பறிமுதல் செய்யப்பட்டவை கவரிங் நகைகளே!!! என்பது தெரிய வந்தது. மேலும், கடையின் பழைய பொருட்களும் இருந்துள்ளன. இதனால் அப்பகுதியில் ஏற்பட்ட பரபரப்பு அடங்கியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X