search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கதிரவன் தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    X
    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கதிரவன் தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

    ஈரோடு மாவட்டத்தில் 192 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை- கலெக்டர் கதிரவன்

    ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை 192 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளதாக கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார். #LSPolls #collectorKathiravan
    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தற்போது தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளது.

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து கட்சியினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் அரசியல்வாதிகள் கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    பின்னர் கலெக்டர் கதிரவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்தவுடன் தேர்தல் ஆணையம் நடத்தை விதிமுறை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

    அதன்படி இந்த தேர்தலில் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை கண்டறிய ஒப்புகை சீட்டு நடைமுறை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்தப்பட உள்ளது. வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடி மையம் குறித்தும் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்தும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

    இதன்படி அரசு மற்றும் அனுமதி பெறாமல் தனியார் சுவர்களில் செய்யப்பட்டுள்ள கட்சிகளின் தேர்தல் விளம்பரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பொது இடங்களில் உள்ள கட்சி கொடிகளையும் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.

    மேலும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பிரசார நடவடிக்கையில் யாரும் ஈடுபடக் கூடாது. தேர்தலை அமைதியான முறையில் நடத்தும் வகையில் பறக்கும் கண்காணிப்பு குழுக்கள் நிலை கண்காணிப்பு குழுக்கள் வீடியோ கண்காணிப்பு குழுக்கள் வீடியோ பார்வை குழுக்கள் என ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் வாக்களிப்பதற்காக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன

    குறிப்பாக கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் , வயதானவர்கள் சிரமமின்றி வாக்களிக்க பல சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை 192 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

    மேலும் கண்காணிப்பு குழுவினர் 24 மணி நேரமும் செயல்படுவார்கள். தேர்தல் குறித்து புகார் தெரிவிக்க தனியாக வாட்ஸ்-அப் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். தேர்தல் நடத்தை அமலில் உள்ளதால் ரூபாய் 50,000 வரை எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. அதற்கு மேல் பணம் எடுத்து சென்றால் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

    முடிந்த அளவு ஆன்லைன் பணவர்த்தனை முறையை பின்பற்றினால் சிறந்ததாக இருக்கும். இதில் தவறு நடக்க வாய்ப்பு இல்லை. வீடியோ குலுக்கல் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மலை கிராம மக்களும் சிரமமின்றி வாக்கு பதிவு செய்ய பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இவர் அவர் கூறினார். #LSPolls #collectorKathiravan

    Next Story
    ×