search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இல்லை- தேர்தல் ஆணையத்தை நாடுகிறது திமுக
    X

    3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இல்லை- தேர்தல் ஆணையத்தை நாடுகிறது திமுக

    3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்காததால் அதிருப்தி அடைந்துள்ள திமுக, இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை நாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #DMK #TNBypoll
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இடைத்தேர்தல் நடத்தப்படாது என்றும், மீதமுள்ள 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பின்னர் அறிவித்தார்.



    இந்நிலையில், சென்னையில் இன்று திமுக எம்பி, எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன், காலியாக உள்ள 21 தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படாததால் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இந்த 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாதது குறித்து தேர்தல் ஆணையத்தை நாடவும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #DMK #TNBypoll
    Next Story
    ×