என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாராளுமன்ற தேர்தல் தேதி 8-ந்தேதி அறிவிப்பு?
Byமாலை மலர்5 March 2019 5:13 AM GMT (Updated: 5 March 2019 7:01 AM GMT)
பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி வருகிற 8-ந்தேதி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நடைபெறுவதற்கான பட்டியலும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. #LSPolls #ElectionCommission
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
கூட்டணி அமைப்பது, தொகுதி ஒதுக்கீடு போன்றவற்றில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.
நாடுமுழுவதும் பல்வேறு கட்டங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுடன் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சிகளும் இந்த கோணத்தில் தான் கூட்டணி அமைத்து வருகின்றன.
இதுபோல் தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவது உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். இன்னும் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
தேர்தல் தேதி அறிவித்த பிறகு புதிய திட்டங்களை தொடங்க முடியாது. எனவே பிரதமரும், முதல்- அமைச்சரும் தொடர்ந்து புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்கள்.
இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி வருகிற 8-ந்தேதி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நடைபெறுவதற்கான பட்டியலும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
நாடுமுழுவதும் பல்வேறு கட்டங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் முதல்கட்டமாக தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் வற்புறுத்தி வருகின்றன. எனவே தமிழ்நாட்டில் பாராளுமன்ற, 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஒரேகட்டமாக நடைபெறும் என்று தெரிகிறது. அடுத்து, தமிழ்நாட்டில் கோடைக்காலம் எனவே முதல் கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தேர்தல் கமிஷன் சிபாரிசு செய்துள்ளது. எனவே முதல் கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கும். இது ஒரே கட்டமாக நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது என்று தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #LSPolls
பாராளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
கூட்டணி அமைப்பது, தொகுதி ஒதுக்கீடு போன்றவற்றில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.
நாடுமுழுவதும் பல்வேறு கட்டங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுடன் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சிகளும் இந்த கோணத்தில் தான் கூட்டணி அமைத்து வருகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு இதுவரை 3 முறை வந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். வருகின்ற 6-ந்தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார். அவருடன் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் பேச இருக்கிறார்கள். தொடர்ந்து நாடுமுழுவதும் பல்வேறு புதிய திட்டங்களை மோடி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார்.
இதுபோல் தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவது உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். இன்னும் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
தேர்தல் தேதி அறிவித்த பிறகு புதிய திட்டங்களை தொடங்க முடியாது. எனவே பிரதமரும், முதல்- அமைச்சரும் தொடர்ந்து புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்கள்.
இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி வருகிற 8-ந்தேதி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நடைபெறுவதற்கான பட்டியலும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
நாடுமுழுவதும் பல்வேறு கட்டங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் முதல்கட்டமாக தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் வற்புறுத்தி வருகின்றன. எனவே தமிழ்நாட்டில் பாராளுமன்ற, 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஒரேகட்டமாக நடைபெறும் என்று தெரிகிறது. அடுத்து, தமிழ்நாட்டில் கோடைக்காலம் எனவே முதல் கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தேர்தல் கமிஷன் சிபாரிசு செய்துள்ளது. எனவே முதல் கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கும். இது ஒரே கட்டமாக நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது என்று தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #LSPolls
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X