search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து -  மெக்கானிக் பலி
    X

    லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து - மெக்கானிக் பலி

    ஜெயங்கொண்டம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மெக்கானிக் பலியானார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள மணக்கரை கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை மகன் சதீஷ்(வயது 22). மோட்டார் சைக்கிள் மெக்கானிக். இவரது நண்பர்கள் சின்ன வளையம் கிராமத்தை சேர்ந்த துரைசாமி மகன் பாலமுருகன்(22), குருவாலப்பர் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த சிற்றரசு மகன் பிரபாகரன்(22)ஆகிய 3 பேரும் திருச்சி- சிதம்பரம் சாலையில் புதுச்சாவடி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது முன்னாள் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் லாரி மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சதீஷ், பாலமுருகன் ஆகிய இருவரும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×