என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து - மெக்கானிக் பலி
Byமாலை மலர்11 Jun 2019 5:55 PM GMT (Updated: 11 Jun 2019 5:55 PM GMT)
ஜெயங்கொண்டம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மெக்கானிக் பலியானார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள மணக்கரை கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை மகன் சதீஷ்(வயது 22). மோட்டார் சைக்கிள் மெக்கானிக். இவரது நண்பர்கள் சின்ன வளையம் கிராமத்தை சேர்ந்த துரைசாமி மகன் பாலமுருகன்(22), குருவாலப்பர் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த சிற்றரசு மகன் பிரபாகரன்(22)ஆகிய 3 பேரும் திருச்சி- சிதம்பரம் சாலையில் புதுச்சாவடி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது முன்னாள் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் லாரி மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சதீஷ், பாலமுருகன் ஆகிய இருவரும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள மணக்கரை கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை மகன் சதீஷ்(வயது 22). மோட்டார் சைக்கிள் மெக்கானிக். இவரது நண்பர்கள் சின்ன வளையம் கிராமத்தை சேர்ந்த துரைசாமி மகன் பாலமுருகன்(22), குருவாலப்பர் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த சிற்றரசு மகன் பிரபாகரன்(22)ஆகிய 3 பேரும் திருச்சி- சிதம்பரம் சாலையில் புதுச்சாவடி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது முன்னாள் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் லாரி மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சதீஷ், பாலமுருகன் ஆகிய இருவரும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X