search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனைவியுடன் கருத்து வேறுபாடு - மகனை பார்க்க அனுமதிக்காததால் தொழிலாளி தற்கொலை
    X

    மனைவியுடன் கருத்து வேறுபாடு - மகனை பார்க்க அனுமதிக்காததால் தொழிலாளி தற்கொலை

    சேலம் அருகே மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக மகனை பார்க்க அனுமதிக்காததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம்:

    சேலம் சிவதாபுரம் அருகே உள்ள வேடுகத்தான் பட்டி, குட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது42). வெள்ளிப்பட்டறை தொழிலாளி. இவருடைய மனைவி தமிழ்செல்வி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் குடும்பத் தகராறு காரணமாக, கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதில் தமிழ்செல்வி தனது மகனுடன் திருவண்ணாமலை மாவட்டத்தில் வசித்து வருகிறார்.

    ராஜகோபால் அவ்வப்போது மகனை பார்ப்பதற்காக திருவண்ணாமலைக்கு செல்வார். ஆனால், மகனை பார்க்க மனைவி அனுமதிப்பதில்லை என தெரிகிறது. இதைபோல் நேற்று முன்தினம் மகனை பார்ப்பதற்காக சென்ற போது அவரை வீட்டிற்குள் விடவில்லை. இதனால் மனம் உடைந்த நிலையில் வீட்டிற்கு திரும்பிய ராஜகோபால் நேற்று இரவு வீட்டிற்குள் தூக்கில் தொங்கினார்.

    இதில் அவர் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×