search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியநாயக்கன்பாளையம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 17 பவுன் நகைகள் திருட்டு
    X

    பெரியநாயக்கன்பாளையம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 17 பவுன் நகைகள் திருட்டு

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரிய நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சதீஸ்குமார் (வயது 56). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 6-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு சென்றார்.

    நேற்று காலை சதீஸ்குமார் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த நெக்லஸ், செயின் மோதிரம் உள்பட 17ž பவுன் தங்க நகைகள், லேப்டாப் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசில் சதீஸ்குமார் புகார் செய்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து வீட்டின் பூட்டை உடைத்து 17ž தங்க நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×