என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓசூர் ஆவலப்பள்ளி ஏரிக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு
Byமாலை மலர்10 Jun 2019 6:24 PM GMT (Updated: 10 Jun 2019 6:24 PM GMT)
ஓசூர் ஆவலப்பள்ளி ஏரிக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரித்துள்ளது. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஆவலப்பள்ளி ஏரி உள்ளது. 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரிக்கு ஆண்டுதோறும் வெளிநாட்டு பறவைகள் வந்து செல்கின்றன. ஓசூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஆவலப்பள்ளி ஏரி நீர் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது.
இந்தநிலையில், இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகளவில் வெளிநாட்டு பறவைகள் ஏரிப்பகுதியில் குவிந்துள்ளன. ஆண்டுதோறும் இந்த ஏரிக்கு வரும் வெளிநாட்டு பறவைகள், 2 மாத காலம் ஏரியில் முட்டையிட்டு குஞ்சு பொரித்த பின்பு மீண்டும் சென்று விடும். தற்போது இங்கு முகாமிட்டுள்ள வெளிநாட்டு பறவைகள், வெள்ளை, கருப்பு, பிங்க் நிறங்கள் கலந்ததாகவும், கால்கள், அலகுகள் நீண்டு உயரமாக அழகாக காணப்படுகின்றன.
ஓசூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஏரிக்கு வந்து வெளிநாட்டு பறவைகளை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். இந்தாண்டு வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளதால் அவற்றை காண பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக ஆவலப்பள்ளி ஏரி, சுற்றுலா தலம் போல் காட்சி அளிக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஆவலப்பள்ளி ஏரி உள்ளது. 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரிக்கு ஆண்டுதோறும் வெளிநாட்டு பறவைகள் வந்து செல்கின்றன. ஓசூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஆவலப்பள்ளி ஏரி நீர் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது.
இந்தநிலையில், இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகளவில் வெளிநாட்டு பறவைகள் ஏரிப்பகுதியில் குவிந்துள்ளன. ஆண்டுதோறும் இந்த ஏரிக்கு வரும் வெளிநாட்டு பறவைகள், 2 மாத காலம் ஏரியில் முட்டையிட்டு குஞ்சு பொரித்த பின்பு மீண்டும் சென்று விடும். தற்போது இங்கு முகாமிட்டுள்ள வெளிநாட்டு பறவைகள், வெள்ளை, கருப்பு, பிங்க் நிறங்கள் கலந்ததாகவும், கால்கள், அலகுகள் நீண்டு உயரமாக அழகாக காணப்படுகின்றன.
ஓசூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஏரிக்கு வந்து வெளிநாட்டு பறவைகளை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். இந்தாண்டு வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளதால் அவற்றை காண பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக ஆவலப்பள்ளி ஏரி, சுற்றுலா தலம் போல் காட்சி அளிக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X