search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர், காடாம்புலியூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
    X

    கடலூர், காடாம்புலியூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

    கடலூர், காடாம்புலியூர் பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என மின்சார வாரியத்தின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    கடலூர்:

    கடலூர் கேப்பர்மலை துணை மின்நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், கடலூர் துறைமுகம், செல்லங்குப்பம், சுத்துகுளம், புருகீஸ்பேட்டை, கொடுக்கன்பாளையம், சிவானந்தபுரம், திருப்பாதிரிப்புலியூர், கூத்தப்பாக்கம், சாத்தங்குப்பம், எஸ்.புதூர், ஒதியடிக்குப்பம், கீரப்பாளையம், ராமாபுரம், வழிசோதனைபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

    மேற்கண்ட தகவலை மின்சார வாரியத்தின் கடலூர் செயற்பொறியாளர் ராமலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதேபோல் கீழக்குப்பம் துணை மின்நிலையத்திலும் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே மருங்கூர், சொரத்தூர், நடுக்குப்பம், முத்தாண்டிக்குப்பம், பேர்பெரியான்குப்பம், வல்லம், காட்டுக்கூடலூர், காடாம்புலியூர், புறங்கணி, காட்டாண்டிக்குப்பம், அழகப்பசமுத்திரம், மேலிருப்பு, கீழிருப்பு, காட்டுப்பாளையம், ஆத்திரிக்குப்பம், மாம்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். இந்த தகவலை பண்ருட்டி செயற்பொறியாளர் பழனிராஜூ தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×