search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
    X

    மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

    மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
    கரூர்:

    கரூரை சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது 58) என்பவர் கடந்த 5-ந்தேதி கரூர் மக்கள் பாதை பகுதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்த போது, மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடி சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் சண்முகசுந்தரம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது, மோட்டார் சைக்கிளை திருடியது திருமாநிலையூரை சேர்ந்த சபரி என்கிற பாண்டி (20) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 
    Next Story
    ×