என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலனை கரம் பிடித்த கல்லூரி மாணவி - போலீசில் தஞ்சம்
Byமாலை மலர்10 Jun 2019 11:20 AM GMT (Updated: 10 Jun 2019 11:20 AM GMT)
பெற்றோர் எதிர்ப்பை மீறி மெக்கானிக்கை கரம் பிடித்த கல்லூரி மாணவி காதலுடன் பாதுகாப்பு கேட்டு ஈரோடு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
ஈரோடு:
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 22). ஏ.சி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் கார்த்திக் கோவை கோவில்மேட்டைச் சேர்ந்த சவுமியா என்ற பெண்ணை காதலித்து வந்தார். சவுமியா அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. பெண் வீட்டில் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் தங்கள் காதலில் உறுதியாக இருந்த கார்த்திக் - சவுமியா வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி வீட்டை விட்டு வெளியேறி கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் கோவையில் இருந்து தப்பி வந்த காதல் ஜோடி ஈரோடு மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
இதுகுறித்து இரு வீட்டு பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இரு வீட்டு பெற்றோர்களும் வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் கார்த்திக் பெற்றோர் தனது மகனின் காதல் திருமணத்தை ஏற்றுக் கொண்டனர்.
ஆனால் சவுமியா பெற்றோர் தங்களது மகளின் காதல் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் இறுதியில் சவுமியா தனது காதல் கணவர் கார்த்திக்குடன் புறப்பட்டு சென்றார்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 22). ஏ.சி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் கார்த்திக் கோவை கோவில்மேட்டைச் சேர்ந்த சவுமியா என்ற பெண்ணை காதலித்து வந்தார். சவுமியா அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. பெண் வீட்டில் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் தங்கள் காதலில் உறுதியாக இருந்த கார்த்திக் - சவுமியா வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி வீட்டை விட்டு வெளியேறி கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் கோவையில் இருந்து தப்பி வந்த காதல் ஜோடி ஈரோடு மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
இதுகுறித்து இரு வீட்டு பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இரு வீட்டு பெற்றோர்களும் வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் கார்த்திக் பெற்றோர் தனது மகனின் காதல் திருமணத்தை ஏற்றுக் கொண்டனர்.
ஆனால் சவுமியா பெற்றோர் தங்களது மகளின் காதல் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் இறுதியில் சவுமியா தனது காதல் கணவர் கார்த்திக்குடன் புறப்பட்டு சென்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X